Wednesday, March 26, 2025

இருபத்தேழாவது தராவீஹ்

 28-03-2025

RAMZAN – 27


بسم الله الرحمن الرحيم  

27 வது இரவு பயான் 



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ (1) وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ (2) لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ (3)

லைலத்துல் கத்ரை இறுதி பத்து நாட்களில் அதுவும் ஒற்றைப் படை இரவுகளில் தேடிக் கொள்ளுங்கள் என்ற ஹதீஸின் அடிப்படையில் இந்த 27 வது இரவும்  லைலத்துல் கத்ர் இரவாக இருக்கலாம் என்ற ஆதரவில் நாம் இங்கே ஒன்று கூடி இருக்கிறோம். லைலத்துல் கத்ரு இரவின் சிறப்பை நாம் அறிந்திருப்போம். எனவே லைலத்துல் கத்ரு இரவில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சுருக்கமாக முதலில் காண்போம். 1. இந்த இரவில் தொழுகை, பயான் கேட்குதல், திக்ரு ஆகிய அமல்கள் செய்வதுடன் இது பாவ மன்னிப்புக் கேட்க வேண்டிய இரவு என்பதால் அதிகமாக பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும். 2. பல்வேறு மார்க்க அறிஞர்களின் கூற்றுப்படி  இவ்வருடம் முதல் அடுத்த வருடம் வரை உள்ள மனிதர்களின் விதிகள் மலக்குகளிடம் ஒப்படைக்கப்படும் இரவு பராஅத் இரவா அல்லது லைலத்துல் கத்ர் இரவா என்பதில்  மார்க்க அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது. அது லைலத்துல் கத்ரு இரவு என்று கூறும் மார்க்க அறிஞர்களும் நிறைய  உள்ளனர். எனவே பராஅத் இரவில் ரிஜ்க் விஸ்தீரணம், முஸீபத்துகளை விட்டும் பாதுகாப்பு, நலவான அமலின் பேரில் ஆயுள் நீளமாகுதல் ஆகிய மூன்று விஷயங்களுக்காக துஆச் செய்வது போன்று இந்த இரவிலும் துஆ செய்யலாம்.  

லைலத்துல் கத்ரு இரவில் பாவமன்னிப்புக் கேட்பது என்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது

عَنْ عَائِشَةَ رض أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ مَا أَدْعُو قَالَ تَقُولِينَ اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي(ابن ماجة

லைலத்துல் கத்ரு இரவை அடைந்தால் நான்  என்ன துஆ ஓத வேண்டும் என ஆயிஷா ரழி அவர்கள் கேட்க, நபி  ஸல் அவர்கள் பாவ மன்னிப்புக்கான மேற்படி துஆவை கற்றுத் தந்தார்கள். 

  விளக்கம்- இதில் அஃபுவ்வுன் என்ற பயன்படுத்தப் பட்டுள்ளது.  மஃபிரத் என்றாலும்  அஃப்வ் என்றாலும் மன்னித்தல் என்பது பொருளாக இருந்தாலும் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. மஃபிரத் என்பதில் இல்லாத கூடுதலான அர்த்தம் அஃப்வ் என்பதில் உள்ளது. அஃப்வ் என்பது தடயமே இல்லாமல் மன்னிப்பதைக் குறிக்கும். உதாரணமாக காவல் நிலையத்தில் ஒருவர் மீது குற்றப் பத்திரிக்கை பதிவு செய்யப் படும் அத்துடன் அவருக்கு விடுதலையும் கொடுக்கப்படும். ஆனால் சிலருக்கு குற்றப் பத்திரிக்கை பதிவு செய்யப் படாமலேயே அவருக்கு விடுதலை கொடுக்கப்படும். இதுபோல மறுமையில் சில அடியார்களை தனியாக அழைத்து நீ இன்ன பாவங்களைச் செய்தாயா என்று கேட்டு பிறகு மன்னிப்பு வழங்குவான். வேறு சில அடியார்களுக்கு அவர்கள் செய்த பாவங்கள் அல்லாஹ்வின் அருளால் அப்போதே அழிக்கப்பட்டிருக்கும்

பாவ மன்னிப்புக் கேட்பது பல பிரச்சினைகளைத் தீர்க்கும்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَزِمَ الِاسْتِغْفَارَ جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ هَمٍّ فَرَجًا وَمِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ (ابن ماجة

யார் இஸ்திஃபாரை அவசியமாக்கிக் கொள்வாரோ அவருக்கு எல்லா விதமான பிரச்சினைகளில் இருந்தும் விடுதலையை அல்லாஹ் தருவான். எல்லாக் கவலைகளையும் அல்லாஹ் நீக்குவான். அவர் அறியாப் புறத்தில் இருந்து அவருக்கு இரணம் வழங்குவான்.                

பஞ்சம் நீங்க, கவலைகள் தீர,  குழந்தை பாக்கியம் பெற ,வீடு,தோட்டம் செழிக்க  இஸ்திஃபார் தான் சிறந்த வழி

وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ (52) سورة هود

فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا-يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا-وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا (12سورة نوح قال مقاتل: لما كذبوا نوحا زمانا طويلا حبس الله عنهم المطر وأعْقَمَ أرحام نسائهم أربعين سنة فهلكتْ مواشيهم وزروعهم فصاروا إلى نوح عليه السلام واستغاثوا به فقال:استغفروا ربكم إنه كان غفارا –(القرطبي)

நபி நூஹ் அலை அவர்களை அவர்களுடைய சமூக மக்கள் நீண்ட காலம் பொய்ப் படுத்தியபோது அல்லாஹ் 40 வருடங்கள் அவர்களுக்கு மழையை நிறுத்தி விட்டான். பெண்களை மலடிகளாக அல்லாஹ் ஆக்கி விட்டான். கால்நடைகளும் விவசாய நிலங்களும் அழிந்தன. அப்போது அவர்கள் நபி நூஹ் அலை அவர்களிடம் முறையிட, நபி நூஹ் அலை அவர்கள் நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுங்கள். அல்லாஹ் உங்களை மன்னிப்பான். மழை பொழிய வைப்பான். குழந்தை பாக்கியங்களைத் தருவான். தோட்டங்களை உருவாக்கி ஆறுகளை அல்லாஹ் ஓடச் செய்வான் என நபி நூஹ் அலை அவர்கள் கூறினார்கள்.                                                

وقال ابن صبيح : شكا رجل إلى الحسن الجدُوْبَة فقال له : اِسْتَغْفِرِ الله وشكا آخر إليه الفقر فقال له : استغفر الله وقال له آخر : اُدْعُ الله أن يرزقني ولدا فقال له :اِسْتَغْفِرِ الله وشكا إليه آخر جفاف بستانه فقال له: استغفر الله فقلنا له في ذلك ؟ فقال :ما قلتُ من عندي شيئا  إن الله تعالى يقول في سورة "نوح": {اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّاراً. يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَاراً. وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَاراً} (القرطبي) 

 ஒருவர் இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் மழை இல்லாததால் ஏற்பட்ட பஞ்சத்தை முறையிட்டபோது அல்லாஹ்விடம் நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் பஞ்சம் நீங்கும் என்று கூறினார்கள். மற்றொருவர் இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் வறுமையை முறையிட்டபோது அல்லாஹ்விடம் நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் வறுமை நீங்கும் என்று கூறினார்கள். மற்றொருவர் இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக துஆச் செய்யுங்கள்என முறையிட்டபோது அல்லாஹ்விடம் நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறினார்கள். மற்றொருவர் தன் தோட்டம் வரண்டு கிடப்பதை முறையிட்டபோது அல்லாஹ்விடம்நீங்கள் அதிகம் மன்னிப்புத் தேடுங்கள் என்று கூறினார்கள். உடன் இருந்தவர்கள் எல்லாவற்றுக்கும் இஸ்திஃபாரைக் கூறுகிறீர்களே என்று கேட்டபோது இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்கள் நான் என் சொந்தக் கருத்தில் எதையும் கூறவில்லை. நபி நூஹ் அலை அவர்கள் தனது சமூக மக்களிடம் கூறியதையே நான் கூறுகிறேன் என்றார்கள்.                                  

قال الشعبي:خرج عُمَر رض يستسقي فلم يزد على الاستغفارحتى رجع فأُمْطِرُوا فقالوا مارأيناك استسقيت؟فقال لقد طلبت المطر بمجاديح السماء التي يستنزل بها المطرثم قرأ:استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا(القرطبي  

உமர் ரழி அவர்கள் மழைத் தொழுகைக்கான குத்பாவின் போது இஸ்திஃபாருடைய வாசகங்களைத் தவிர வேறு எதையும் கூறவில்லை. திரும்பி வருவதற்குள் அல்லாஹ் மழையை இறக்கினான். உமர் ரழி அவர்களிடம் சிலர் நீங்கள் மழைக்கான பிரார்த்தனை எதுவுமே கேட்கவில்லையே எவ்வாறு மழை பெய்தது என்று கேட்க, அதற்கு உமர் ரழி நான் அல்லாஹ்விடம் மழைவருவதற்குமுன் அதன் அறிகுறியாக தோன்றும் நட்சத்திரங்களுக்கு ஒப்பான இஸ்திஃபாரை வைத்து அல்லாஹ்விடம் மழை வேண்டினேன். மழையை இறக்கினான் என்றார்கள்  

عَنِ الأَوْزَاعِيِّ"خَرَجَ النَّاسُ إِلَى الاسْتِسْقَاءِ، فَقَامَ فِيهِنَّ بِلالُ بْنُ سَعْدٍ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: يَا مَعْشَرُ مَنْ حَضَرَ، أَلَسْتُمْ مُقِرِّينَ بِالإِسَاءَةِ ؟ قَالُوا: اللَّهُمَّ نَعَمْ، قَالَ: اللَّهُمَّ إِنَّا نَسْمَعُكَ تَقُولُ:  " مَا عَلَى الْمُحْسِنِينَ مِنْ سَبِيلٍ "  وَقَدْ أَقْرَرْنَا بِالإِسَاءَةِ فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا، وَاسْقِنَا، وَرَفَعَ يَدَيْهِ وَرَفَعُوا أَيْدِيَهُمْ، فَسُقُوا".  (تفسير  ابن ابي حاتم

 திமிஷ்க் நகரில் ஏற்பட்ட பஞ்சத்திற்காக மக்கள் மழைத்தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்களின் இமாம் பிலால் இப்னு ஸஃது ரஹ் அவர்கள் அல்லாஹ்வைப் புகழந்த பின் மக்களை நோக்கி மக்களே நீங்கள் உங்களின் பாவத்தை அல்லாஹ்விடம் முறையிட மாட்டீர்களா என்று கேட்க, அதற்கு மக்கள் நாங்கள் முறையிடுகிறோம் என்றார்கள். அப்போது பிலால் இப்னு ஸஃது ரஹ் அவர்கள் யாஅல்லாஹ் உனது குர்ஆனில் நல்லோர்களுக்கு எல்லாப் பிரச்சினைக்கும் தவ்பாவைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளாய் நாங்கள் எங்களுடைய பாவங்களை உன்னிடம் முறையிடுகிறோம் எங்களை மன்னித்து மழையை இறக்கு என்று கேட்டார்கள். இமாம் அவர்களும் கையை உயர்த்தினார்கள். மற்றவர்களும் கையை உயர்த்தினார்கள். அல்லாஹ் மழையை இறக்கினான்.                             

عَنْ حُذَيْفَةَ قَالَ كَانَ فِي لِسَانِي ذَرَبٌ عَلَى أَهْلِي وَكَانَ لَا يَعْدُوهُمْ إِلَى غَيْرِهِمْ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيْنَ أَنْتَ مِنْ الِاسْتِغْفَارِ تَسْتَغْفِرُ اللَّهَ فِي الْيَوْمِ سَبْعِينَ مَرَّةً (ابن ماجة)

கருத்து-ஹுதைபா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் நான் என்னையும் அறியாமல் என் குடும்பத்தாரை அதிகம் திட்டி விடுகிறேன் என்று கூறியபோது அதிகம் இஸ்திஃபார் செய்வீராக என்று கூறினார்கள்

كان الإمام أبو حنيفة إذا أشكَلت عليه مسألة قال لأصحابه: "ما هذا إلا لذنبٍ أحدثتُه"، وكان يستغفر، وربما قام وصلى، فتنكشف له المسألة، ويقول: "رجوتُ أني تِيبَ علَيَّ"؛ (الجواهر المضية - محيي الدين الحنفي - ج- 2 - ص- 478).

இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்களுக்கு ஏதேனும் ஒரு மஸ்அலாவில் சிக்கல் ஏற்பட்டால் நான் செய்த பாவத்தின் காரணமாகவே இது ஏற்பட்டுள்ளது என்று கூறி இஸ்திஃபார் செய்வார்கள். சில நேரங்களில் அதற்காக தொழுது தவ்பா செய்வார்கள். அதன் பின்பு அந்த சிக்கல் நீங்கும். அப்போது இமாம் அவர்கள் என்னுடைய தவ்பா ஏற்கப்பட்டதன் அடையாளமாக இந்த சிக்கல் நீங்கி இருக்கலாம் என நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறுவார்கள்.                                                                     

இஸ்திஃபாரின் பலனை அனுபவித்த நல்லடியாரின் வரலாறு

كان الإمام أحمد بن حنبل في مدينة غريبة لا يعرفه أهلها وقرر بعد أن بلغ به التعب مبلغه أن ينام في المسجد فرآه حارس المسجد فرفض أن يمكث فيه فقال الإمام سوف أنام موضع قدمي فقط ونام الإمام موضع قدمه فقام الحارس بسحبه من قدميه وأخرجه من المسجد  وكان الإمام أحمد شيخا وقورا تبدو على وجهه ملامح التقوى والصلاح، فلما رآه خباز بهذه الهيئة عرض عليه أن يحضر لينام في منزله، فذهب معه ولاحظ الإمام أحمد أن الخباز وهو يقوم بعمله في عجن العجين وخبز الخبز أنه يستغفر ويستغفر ويستغفر،فلما رأى الإمام حال هذا الخباز مع الاستغفار استأذنه أن يسأله سؤالاً، وكان الإمام يعرف أن للاستغفار فوائد عظيمة، فقال له هل وجدت لاستغفارك هذا ثمرة، فأجابه الخباز: نعم.. أنا والله كلما دعوت الله دعوة استجابها لي ما عدا دعوة واحدة، قال له الإمام أحمد وما هي هذه الدعوة التي لم تستجب؟ قال الخباز: دعوت الله أن يريني الإمام أحمد بن حنبل فقال الإمام: أنا الإمام أحمد بن حنبل، والله إني جررت إليك جراً؟

இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் ரஹ் அவர்கள் ஒரு ஊருக்குச் சென்றார்கள். மிக களைப்பாக இருந்ததால் சற்று நேரம் ஓய்வெடுக்க ஒரு மஸ்ஜிதில் அனுமதி கேட்டார்கள். முஅத்தினுக்கு இவர்களை யாரென்று தெரியாததாலும் இமாம் அவர்களும் தங்களை அறிமுகப் படுத்தவில்லை  என்பதாலும் அவர்   இங்கெல்லாம் தங்க முடியாது என்று உறுதியாக க் கூறினார். இமாம் அவர்கள் அதிக களைப்பின் காரணமாக சற்று ஓரமாக படுத்தார்கள். அது கண்ட முஅத்தின் காலைப் பிடித்து  இழுத்து வெளியே தள்ளினார். இமாம் அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்த போது  ரொட்டி சுட்டு விற்பனை செய்யும் ஏழை ஒருவரைச் சந்தித்தார்கள். அவர் இமாம் அவர்களை நோக்கி நீங்கள் மிகவும் களைப்புடன் காணப்படுகிறீர்கள். என் வீட்டுக்கு வந்து ஓய்வெடுங்கள் என்று வற்புறுத்தி அழைத்துச் சென்றார். அங்கு தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் அந்த ஏழையின் செயல்பாடுகளை இமாம் அவர்கள் உற்று கவனித்தார்கள். ரொட்டி சுடும்போதெல்லாம் அவரின் நாவின் இஸ்திஃபார்  வெளிப்பட்டுக் கொண்டேயிருந்த து. அதைக் கவனித்த இமாம் அவர்கள் நீங்கள் எல்லா சந்தர்ப்பத்திலும் இஸ்திஃபாரை மொழிந்து கொண்டே இருக்கிறீர்கள். இதன் பலனை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா என்று கேட்க, அந்த ஏழை வியாபாரி நான் இதன் பலனை நிறைய அனுபவித்துள்ளேன். நான் கேட்கும் துஆக்கள் அனைத்தும் ஒப்புக் கொள்ளப்படுகிறது என்று கூறி விட்டு, பிறகு வருத்தத்துடன்  நான் பல வருடமாக கேட்டும் ஒரே ஒரு துஆ மட்டும் இதுவரை நிறைவேறவில்லை என்றார். அது என்ன என்று இமாம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் நான் இமாம் அஹ்மதுப்னு ஹன்பல் ரஹ் அவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். பல வருடங்களாக  அவர்களைக் காண வேண்டும் என்று துஆ கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இதுவரை நிறைவேறவில்லை என்று கூறிய போது இமாம் அவர்கள்  மிகவும் ஆச்சரியத்துடன்  நான் தான் அஹ்மதுப்னு ஹன்பல்  அல்லாஹ்வின் மீது சத்தியமாக  உங்களிடம் நானாக வரவில்லை. காலைப் பிடித்து இழுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளேன் என்றார்கள்.                                 

 இஸ்திஃபாரை அவசியமாக்கிக் கொண்ட சமூகத்தை அல்லாஹ்  ஆட்சியாளர்கள் மூலம் தண்டிக்க மாட்டான்  وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ (33)الانفال

கருத்து – இரண்டு விதமான பாதுகாப்புகள் இருக்கும் வரை அல்லாஹ் நம்மை சோதிக்க மாட்டான் 1. நபி ஸல் அவர்கள் நம்மோடு இருப்பது. 2.இஸ்திஃபாரை அவசியமாக்கிக் கொள்வது  முந்தியது சாத்தியமில்லை என்றாலும் பிந்தியது சாத்தியம். 

தவ்பா செய்யாத பாவத்திற்கு அல்லாஹ் தரும் தண்டனை அது போன்றதை மீண்டும் செய்ய வைப்பதாகும். 

قال الإمام ابن القيم رحمه الله: "المعاصي تزرع أمثالها، وتولد بعضها بعضًا، حتى يَعِزَّ على العبد مفارقتها والخروج منها، كما قال بعض السلف: إن مِن عقوبة السيئةِ السيئةَ بعدها، وإن من ثواب الحسنةِ الحسنةَ بعدها؛ فالعبد إذا عمل حسنةً قالت أخرى إلى جنبها: اعملني أيضًا، فإذا عملها، قالت الثالثة كذلك، فتضاعف الربح، وتزايدت الحسنات، وكذلك كانت السيئات أيضًا، حتى تصير الطاعات والمعاصي هيئاتٍ راسخةً، وصفاتٍ لازمةً، وملَكاتٍ ثابتةً، فلو عطَّل المحسن الطاعة لضاقت عليه نفسه، وضاقت عليه الأرض بما رحبت، وأحسَّ من نفسه بأنه كالحوت إذا فارق الماء، حتى يعاودها، فتسكُنَ نفسُه، وتقَرَّ عينه، ولو عطَّل المجرم المعصية وأقبل على الطاعة، لضاقت عليه نفسه، وضاق صدره، وأعيت عليه مذاهبه، حتى يعاودها، حتى إن كثيرًا من الفسَّاق ليواقع المعصية من غير لذةٍ يجدها، ولا داعيةٍ إليها، إلا بما يجد من الألم بمفارقتها"؛ (الجواب الكافي - لابن القيم - ص- 81).

 இமாம் இப்னுல் கைய்யிம் ரஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். சில பாவங்கள் மற்ற பாவங்களைப் பயிரிடும். பாவங்கள் என்ற பல சந்ததிகளை உருவாக்கும். ஒரு பாவத்தைச் செய்தவன் அதைப் பிரிய முடியாத அளவுக்கு அடுத்தடுத்த பாவங்களின் மீது ஈர்க்கப்படுவான். எனவே தான் முன்னோர்களில் ஒருவர் கூறும்போது தவ்பா செய்யாத பாவத்திற்கு அல்லாஹ் தரும் தண்டனை அது போன்றதை மீண்டும் செய்ய வைப்பதாகும். அதேபோல் நன்மையான காரியத்திற்கு அல்லாஹ் தரும் பிரதிபலன் அதுபோன்ற நன்மையை செய்ய வைப்பதாகும் என்பார்.  

 (எனவே பாவங்கள் என்பதும் நன்மைகள் என்பதும் நாடகங்களில் வரும் தொடர்களைப் போன்றாகும்.)  ஒரு நன்மையை ஒருவன் செய்து விட்டால் அடுத்த நன்மை அவனிடம் என்னையும் நீ செய் என்று கூறும். அதையும் அவன் செய்து விட்டால் அடுத்த மூன்றாவது நன்மை என்னையும் நீ செய் என்று கூறும். இதனால் இலாபங்கள் அதிகரிக்கும். அதேபோல் ஒரு பாவத்தை ஒருவன் செய்து விட்டால் அடுத்த பாவம் அவனிடம் என்னையும் நீ செய் என்று கூறும். அதையும் அவன் செய்து விட்டால் அடுத்த மூன்றாவது பாவம் என்னையும் நீ செய் என்று கூறும்.ஒவ்வொரு பாவமும் ஒவ்வொரு நன்மையும் அதுபோன்றதை தன் பக்கம் ஈர்க்கக்கூடிய (காந்தம்) போலவே செயல்படும். தண்ணீரை விட்டு வெளியே எடுக்கப்பட்ட மீன் மீண்டும் தண்ணீருக்குள்ளேயே இருப்பதற்கு எப்படித் துடிக்குமோ அது போன்று நன்மை செய்தவன் மீண்டும் நன்மை செய்ய துடிப்பான். பாவம் செய்தவன் பாவம் செய்யத் துடிப்பான்.இதனால் தான் ஒருவன் பாவத்தை விட்டும் விலகி நன்மை செய்ய நாடும்போது அவன் சிரமப்படுகிறான். அதற்காக அவன் தேடும் வழிகள் கண்களுக்கு மறைக்கப்படுகிறது. ஷைத்தான் பல  இடையூறுகள் செய்வான். வேறு வழியின்றி மீண்டும் அவன் பாவத்திற்குத் திரும்புகிறான். ஆனால் அந்த சிரமங்களையும் மீறி அவன் நன்மைகளைச் செய்யும்போது குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் தான் அவன் அங்கீகரிக்கப்படுகிறான். எத்தனையோ பாவிகள் அவர்கள் செய்யும் பாவத்தை தொடர்ந்து செய்வார்கள். அதனால் இன்பத்திற்கு பதிலாக துன்பத்தையே அனுபவிப்பார்கள். (சாராயம் குடித்தே நான் செத்தாலும் சரி... நான் குடிப்பேன் என்பது போல.) ஆனாலும் அந்தப் பாவத்தை விட மாட்டார்கள்.                                 

தவ்பா இல்லாத பாவங்களால் பரக்கத் நீங்கும்.

ومعنى قوله تعالى: {ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النّاسِ}الروم 41 -أي بان النقص في الزروع والثمار بسبب المعاصي. وقال أبو العالية: من عصى الله في الأرض فقد أفسد في الأرض, لأن صلاح الأرض والسماء بالطاعة, ولهذا جاء في الحديث الذي رواه أبو داود "لحد يقام في الأرض أحب إلى أهلها من أن يمطروا أربعين صباحاً" والسبب في هذا أن الحدود إذا أقيمت انكف الناس أو أكثرهم أو كثير منهم عن تعاطي المحرمات, وإذا تركت المعاصي كان سبباً في حصول البركات من السماء والأرض. ولهذا إذا نزل عيسى بن مريم عليه السلام في آخر الزمان يحكم بهذه الشريعة المطهرة في ذلك الوقت من قتل الخنزير وكسر الصليب ووضع الجزية, وهو تركها, فلا يقبل إلا الإسلام أو السيف, فإذا أهلك الله في زمانه الدجال وأتباعه ويأجوج ومأجوج, قيل للأرض: أخرجي بركتك, فيأكل من الرمانة الفئام من الناس ويستظلون بقحفها, ويكفي لبن اللقحة الجماعة من الناس, وما ذاك إلا ببركة تنفيذ شريعة محمد صلى الله عليه وسلم فكلما أقيم العدل كثرت البركات والخير. ولهذا ثبت في الصحيح أن الفاجر إذا مات تستريح منه العباد والبلاد والشجر والدواب. (تفسير ابن كثير)

ஒரு கெட்டவனுக்கு முறைப்படி தண்டனை வழங்கப்பட்டு அவன் செத்து விடுகிறான்  என்றால் அதனால் ஏற்படும் பரக்கத், செழிப்பாகிறது நாற்பது நாட்கள் மழை பெய்வதால் ஏற்படும் செழிப்பை விட அதிகமாகும் என்று கூறினார்கள் அதாவது  அந்த  கெட்டவன் உயிரோடு நம்முடன் வாழ்ந்து கொண்டிருந்த வரை அவனுடைய பாவங்கள் அளவுக்கு இந்த பூமியில் செழிப்பு கொஞ்சம் குறைந்திருந்தது அவன் இறந்த பின்பு அந்த செழிப்பு மீண்டும் ஏற்படுகிறது இதனால் தான் ஒரு கெட்டவன் செத்துப் போனால் இந்த பூமியில் உள்ள மலைகள்,மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் நிம்மதி அடைகின்றன. அது மட்டுமல்லாமல் இறை நல்லடியார்களும் நிம்மதி அடைகிறார்கள் ஆக எந்த அளவுக்கு இந்த பூமியில் கெட்டவர்கள் அதிகம் இருக்கிறார்களோ அந்த அளவுக்கு இந்த பூமி பாதிக்கப்படும் ஆனால் கடைசி காலத்தில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் இந்த பூமிக்கு வரும்போது கெட்டவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் நல்லவர்கள் மட்டுமே இருப்பார்கள் அப்போது இந்த பூமியைப் பார்த்து அல்லாஹ் சொல்லுவான் பூமியே நீ உன்னுடைய பரக்கத்தை முழுமையாக வெளிப்படுத்து என்று அல்லாஹ் கூறுவான் அப்போது இந்த பூமி மிகவும் செழிப்பாக இருக்கும். எந்த அளவுக்கென்றால் இந்த பூமியில் விளையும் ஒரு மாதுளம்பழத்தை ஒரு கூட்டமே உட்கார்ந்து சாப்பிடுவார்கள் சாப்பிட்ட பின்  அதனுடைய தோலை மக்கள் மழைக்கு குடையாக பயன்படுத்துவார்கள் அந்த அளவுக்கு மாதுளம் பழம் பெரிதாக இருக்கும். ஒரே ஒரு மாட்டிலிருந்து கறக்கப்படும் பால் ஒரு மாபெரும் கூட்டத்தினருக்கே போதுமானதாக இருக்கும் இவ்வாறு எல்லாவற்றிலும் செழிப்பு வந்துவிடும்.                                         

தவ்பா இல்லாத பாவங்களின் காரணமாக வணக்க வழிபாட்டில் படிப்படியாக தடை ஏற்படும்.

அதாவது இன்று ஒரு பாவம் செய்தால் இன்று ஒரு வணக்கம் தடைபடும். நாளை ஒரு பாவம் செய்தால் நாளை ஒரு வணக்கம் தடைபடும். உதாரணமாக முதலில் நஃபிலான வணக்கம் தடைபடும். பின்பு சுன்னத்தான வணக்கங்கள் தடைபடும். அப்போதுதான் இது பாவத்தின் பாதிப்புகள் என்பது புரியும்.


பராஅத் இரவில் மூன்று விதமான துஆக்களை அல்லாஹ்விடம் கேட்பது போல் இந்த இரவிலும் துஆ  கேட்கலாம்

இவ்வருடம் முதல் அடுத்த வருடம் வரை உள்ள மனிதர்களின் விதிகள் மலக்குகளிடம் ஒப்படைக்கப்படும் இரவு பராஅத் இரவா அல்லது லைலத்துல் கத்ர் இரவா என்பதில்  பல அறிஞர்களின் கருத்து லைலத்துல் கத்ரு என்பதாகும். எனவே பராஅத் இரவில் ரிஜ்க் விஸ்தீரணம், முஸீபத்துகளை விட்டும் பாதுகாப்பு, நலவான அமலின் பேரில் ஆயுள் நீளமாகுதல் ஆகிய மூன்று விஷயங்களுக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்வது போன்று இந்த இரவிலும் துஆ செய்யலாம்

إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُّبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنذِرِينَ- فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ(سورة الدخان) أَيْ فِي لَيْلَة الْقَدْر يُفْصَل مِنْ اللَّوْح الْمَحْفُوظ إِلَى الْكَتَبَة أَمْر السّنَة وَمَا يَكُون فِيهَا مِنْ الْآجَال وَالْأَرْزَاق وَمَا يَكُون فِيهَا إِلَى آخِرهَا وَهَكَذَارُوِيَ عَنْ اِبْن عُمَر وَمُجَاهِد وَأَبِي مَالِك وَالضَّحَّاك وَغَيْر وَاحِد مِنْ السَّلَف (تفسير ابن كثير) عَنِ ابْنِ عَبَّاس رضي الله عنه قَالَ:إِنَّكَ لَتَرَى الرَّجُلَ يَمْشِي فِي الْأَسْوَاقِ وَقَدْ وَقَعَ اسْمُهُ فِي الْمَوْتَى، ثُمَّ قَرَأَ" إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ-فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ  يَعْنِي لَيْلَةَ الْقَدْرِ قَالَ: فَفِي تِلْكَ اللَّيْلَةِ يُفْرَقُ أَمْرُ الدُّنْيَا إِلَى مِثْلِهَا مِنْ قَابِلٍ مَوْتٌ أَوْ حَيَاةٌ أَوْ رِزْقٌ كُلُّ أَمْرِ الدُّنْيَا يُفْرَقُ تِلْكَ اللَّيْلَةَ إِلَى مِثْلِهَا مِنْ قَابِلٍ (تفسير ابن ابي حاتم    

واعلم أن تقدير الله لا يحدث في تلك الليلة فإنه تعالى قدر المقادير قبل أن يخلق السموات والأرض في الأزل ، بل المراد إظهار تلك الليلة المقادير للملائكة في تلك الليلة بأن يكتبها في اللوح المحفوظ وهذا القول اختيار عامة العلماء (تفسير الرازي)

ரிஜ்கில் பரக்கத்தை தரும்படி அல்லாஹ்விடம் கேட்பது. ரிஜ்க் என்பது விசாலமான பொருள் கொண்டது

உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பெற்றெடுத்த பிள்ளை, சம்பாதிக்கும் பணம் அனைத்திலும் பரக்கத் வேண்டி அல்லாஹ்விடம் கேட்கிறோம். காரணம் எல்லாவற்றிலும்  பரக்கத் மிக மிக அவசியம். பரக்கத் என்பதற்கு அந்தந்த இடத்திற்கு தகுந்த மாதிரி வளர்ச்சி, முன்னேற்றம், வெற்றி, நிம்மதி என பல அர்த்தங்கள் உண்டு.

وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ مِنْ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ (151)الانعامعَنْ عَلِيِّ بْنِ بَكَّارٍ، قَالَ: شَكَا رَجُلٌ إِلَى إِبْرَاهِيمَ بْنِ أَدْهَمَ كَثْرَةَ عِيَالِهِ، فَقَالَ لَهُ إِبْرَاهِيمُ: " يَا أَخِي، انْظُرْ كُلَّ مَنْ فِي مَنْزِلِكَ لَيْسَ رِزْقُهُ عَلَى اللهِ فَحَوِّلْهُ إِلَى مَنْزِلِي "شعب الايمان

இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்களிடம் ஒருவர் வந்து தன் குடும்பம் பெருகி விட்டதையும்  அதனால் உணவு நெருக்கடி ஏற்படுமோ என்ற தனது பயத்தையும் தெரிவித்தார் அதற்கு இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்கள் உனது வீட்டில் யாருக்கு அல்லாஹ் ரிஜ்க் தர மாட்டான் என்று நீ நினைக்கிறாயோ அவர்களை என்னிடம் அனுப்பி வை.. எனது பொறுப்பில் உள்ளவர்களுக்கெல்லாம் சேர்த்தே அல்லாஹ் எனக்கு ரிஜ்க் தருவான் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்கள். 

1. உண்ணும் உணவில் பரக்கத் இருந்தால் குறைந்த உணவும் வயிறை நிரப்பும்

قَالَ النَّوَوِيّ :وَالْمُرَاد بِالْبَرَكَةِ مَا تَحْصُل بِهِ التَّغْذِيَة وَتَسْلَم عَاقِبَتُهُ مِنْ الْأَذَى وَيُقَوِّي عَلَى الطَّاعَة وَالْعِلْم عِنْد اللَّه(فتح الباري

இமாம் நவவீ ரஹ் அவர்கள் உணவு விஷயத்தில் பரக்கத் என்பதற்கு விளக்கம் கூறும்போது எந்த உணவின் மூலம் வயிறும் நிரம்புவதுடன் உடல் உபாதைகள் ஏற்படாமல் இருக்குமோ, வணக்க வழிபாடுகளுக்கு உதவியாகவும் இருக்குமோ, தீனுடைய கல்வி சார்ந்த சிந்தனைகள் பெருகுவதற்குக் காரணமாக இருக்குமோ அது தான் உணவில் பரக்கத் என்று கூறினார்கள் 

உணவில் பரக்கத் இருந்தால் கல்வி சார்ந்த சிந்தனைகள் பெருகும் என்பதற்கு உதாரணம்.

இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக கேள்விப்பட்டு அவர்களின் முன்னால் மாணவரான அஹமத் இப்னு ஹன்பல் அவர்கள் தம் ஆசிரியரை பார்க்க தாம் வரவிருப்பதாக சொல்லியனுப்புகிறார்கள் அதைக் கேள்விப்பட்ட இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் மிகவும் மிகவும் மகிழ்ந்து தம்முடைய இந்நாள் மாணவர்களிடம்  என்னுடைய மாணவர்  வருகிறார் அவரை நீங்கள் நன்கு உபசரிக்க வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள்.                                                                

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் வந்தவுடன் ஆசிரியரை நலம் விசாரித்து விட்டு புறப்பட எண்ணிய போது ஷாஃபிஈ ரஹ் அவர்கள்  இருங்கள் இங்கே தங்கி விட்டு நாளை செல்லுங்கள் அன்புடன் கூற, அதை ஏற்று இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள்  அங்கே தங்குகிறார்கள். அப்போது ஷாஃபிஈ ரஹ் அவர்கள் தம் மாணவர்களை அழைத்து அவரை நன்கு உபசரியுங்கள் மறக்காமல் அவர் தங்கும் அறையில் உளூச் செய்ய தண்ணீர் வைக்க வேண்டும் ஏனெனில் என் முன்னால் மாணவர் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் தவறாமல் தஹஜ்ஜத் தொழுகையை கடைபிடிப்பவர் என்று கூற, மாணவர்களும் அவ்விதமே செய்தார்கள். அதிகாலையில் மாணவர்கள் சென்று பார்த்த போது தண்ணீர் அப்படியே இருக்கிறது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த விஷயம் மாணவர்களின் மனதில் ஒரு நெருடலை ஏற்படுத்த அதை ஆசிரியரிம் கூறினார்கள் அப்போது ஷாஃபிஈ ரஹ் அவர்கள் இதில் ஏதேனும் காரணம் இருக்கும் இந்த விஷயத்தை நீங்கள் விட்டு விடுங்கள் நான் அவரிடம் பேசிக் கொள்கிறேன் என்றார்கள் அதிகாலையில் சுப்ஹுக்கு வந்த போது அவர்களிடம் நைசாகப் பேசி  நேற்று நீங்கள் தஹஜ்ஜுத் தொழுகையை தொழவில்லையா மாணவர்கள் வைத்த தண்ணீர் அப்படியே இருந்ததாக கூறினார்களே  என அன்புடன் கேட்ட போது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் சொன்ன பதில் - ஆசிரியர் அவர்களே கடந்த பல நாட்களாக  ஹலாலான உணவு எனக்குக் குறைவாகவே கிடைத்த து. இந்த நிலையில் நேற்று இஷா முடிந்த பின் நீங்கள் வழங்கிய ஹலாலான உணவை திருப்தியாக சாப்பிட்ட பின் எனக்கு நல்ல சிந்தனைகளும், அதில் ஓர்மையும் ஏற்பட்டது நான் இஷாவிற்குச் செய்த உளூவுடன் இரவு முழுவதும் தூங்காமல்  குர்ஆன், ஹதீஸை ஆய்வு செய்து பல சட்டங்களை எடுத்தேன். அப்படியே தஹஜ்ஜுத் நேரம் ஆகி விட்டது உளூவுடன் இருந்ததால் அப்படியே தஹஜ்ஜுத் தொழுது விட்டு சற்று நேரம் தூங்கி விட்டேன். அந்த நேரத்தில்தான் மாணவர்கள் வந்து பார்த்துள்ளார்கள் என்று கூறினார்கள்.

சிறந்த முஃமினின் உணவில் பரக்கத் செய்யப்படும் என்பதால் குறைந்த உணவே அவருக்குப்போதும்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامُ الِاثْنَيْنِ كَافِي الثَّلَاثَةِ وَطَعَامُ الثَّلَاثَةِ كَافِي الْأَرْبَعَةِ (بخاري) بَاب طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الِاثْنَيْنِ- كتاب الأطعمة- 

عَنْ أَبِي هُرَيْرَةَ   أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَافَهُ ضَيْفٌ وَهُوَ كَافِرٌ فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ فَحُلِبَتْ فَشَرِبَ حِلَابَهَا ثُمَّ أُخْرَى فَشَرِبَهُ ثُمَّ أُخْرَى فَشَرِبَهُ حَتَّى شَرِبَ حِلَابَ سَبْعِ شِيَاهٍ ثُمَّ إِنَّهُ أَصْبَحَ فَأَسْلَمَ فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ فَشَرِبَ حِلَابَهَا ثُمَّ أَمَرَ بِأُخْرَى فَلَمْ يَسْتَتِمَّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ يَشْرَبُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَشْرَبُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ (مسلم)بَاب الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ-كِتَاب الْأَشْرِبَةِ-

நபி ஸல் அவர்களிடம் ஒரு மாற்று மதத்தவர் விருந்தாளியாக வந்தார். முதல்நாள் அவருக்கு ஆட்டுப்பால் குடிக்கத் தரும்படி நபி ஸல் உத்தரவிட்டார்கள். அவர் குடித்தார். மீண்டும் தரப்ப்பட்டது. குடித்தார். இவ்வாறே ஏழு கோப்பைகளை காலி செய்தார். பிறகு அவர் முஸ்லிமாக விட்டார். அதன்பின்பு அவரிடம் ஆட்டுப்பால் குடிக்கத் தந்த போது ஒரு கோப்பைக்கு மேல் அவரால் குடிக்க முடியவில்லை. அப்போது நபி ஸல் அவர்கள் ஒரு முஃமின் ஒரு இரைப்பையை நிரப்பிக் கொள்ளும் அளவுக்கு மட்டுமே அருந்துவார். ஆனால் ஒரு காஃபிர் ஏழு இரைப்பைகளை நிரப்பிக் கொள்ளும்  அளவுக்கு அருந்துவார் என்றார்கள்.                               

قال القرطبي:المؤمن يأكل للضرورة والكافر يأكل للشهوة أو المؤمن يقل حرصه وشرهه على الطعام ويبارك له في مأكله ومشربه فيشبع من قليل والكافر شديد الحرص لا يطمح بصره إلا للمطاعم والمشارب كالأنعام فمثل ما بينهما من التفاوت كما بين من يأكل في وعاء ومن يأكل في سبعة (فيض القدير) 

عَنْ نَافِعٍ قَالَ كَانَ ابْنُ عُمَرَ لَا يَأْكُلُ حَتَّى يُؤْتَى بِمِسْكِينٍ يَأْكُلُ مَعَهُ فَأَدْخَلْتُ رَجُلًا يَأْكُلُ مَعَهُ فَأَكَلَ كَثِيرًا فَقَالَ يَا نَافِعُ لَا تُدْخِلْ هَذَا عَلَيَّ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ (بخاري)باب الْمُؤْمِنُ يَأْكُلُ فِى مِعًى وَاحِدٍ- الْأَشْرِبَةِ

2.3. நலவான அமலின் பேரில் ஆயுளை அல்லாஹ் நீளமாக்கிடவும் இந்த இரவில் துஆச் செய்யலாம்

காரணம் இந்த வருடம் முதல் அடுத்த வருடம் வரையிலான விதிகள் மலக்குகளிடம் ஒப்படைக்கப்படும்போது அடுத்த வருடத்திற்குள் நமக்கு மவ்த் நிர்ணயிக்கப் பட்டிருந்தாலோ அல்லது ஏதேனும் முஸீபத்துகள் ஏற்படும் என்றிருந்தாலோ நம்முடைய துஆவின் காரணமாக அது தடுக்கப்படும். 

عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَزِيدُ فِي الْعُمْرِ إِلَّا الْبِرُّ وَلَا يَرُدُّ الْقَدَرَ إِلَّا الدُّعَاءُ وَإِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيبُهُ (ابن ماجة) 

நற்காரியங்கள் ஆயுளை அதிகரிக்கும். துஆ விதியை மாற்றும். ஒருவன் செய்யும் பாவங்களால் அவனுக்குக் கிடைக்க வேண்டிய அபிவிருத்தி தடுக்கப்படும்.

عن ابن عمر رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه و سلم : الدعاء ينفع مما نزل و مما لم ينزل فعليكم عباد الله بالدعاء (حاكم)

عَنْ أَبِي سَعِيدٍ رضي الله عنه  أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو بِدَعْوَةٍ لَيْسَ فِيهَا إِثْمٌ وَلَا قَطِيعَةُ رَحِمٍ إِلَّا أَعْطَاهُ اللَّهُ بِهَا إِحْدَى ثَلَاثٍ إِمَّا أَنْ تُعَجَّلَ لَهُ دَعْوَتُهُ وَإِمَّا أَنْ يَدَّخِرَهَا لَهُ فِي الْآخِرَةِ وَإِمَّا أَنْ يَصْرِفَ عَنْهُ مِنْ السُّوءِ مِثْلَهَا قَالُوا إِذًا نُكْثِرُ قَالَ اللَّهُ أَكْثَرُ (مسند)

அல்லாஹ் விதியை மாற்றியமைப்பதற்கு ஒரு உதாரணம்

لَهُ مُعَقِّبَاتٌ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُمْ مِنْ دُونِهِ مِنْ وَالٍ (11)الرعد

  மேற்படி வசனத்திற்கு விரிவான விளக்கம் உள்ளது. அதில் ஒரு துளி என்னவென்றால் வலது இடது தோளில் உள்ள கிராமன் காதீபீன் அல்லாத இன்னும் இரு மலக்குகள் நமக்கு முன்னும் பின்னும் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றனர். சமீபத்தில் ஒரு நண்பர் வந்து சொன்னார் சில வருடங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கி விட்டது. பயணம் செய்த பலர் இறந்து விட்டனர். ஆனால் நான் மட்டும் எந்தக் காயமும் இல்லாமல் தப்பித்தேன். மயக்கம் மட்டும் இருந்த நிலையில் நான் வெளியில் கிடந்தேன். விபத்து நடக்கும் நேரத்தில் என்னை யாரோ காரில் இருந்து வெளியே வீசியிருக்கலாம் என்று நெகிழ்வுடன் ஆதாரத்துடன் கூறினார்.

விபத்தில் ஒருவரின் உயிர் பிரிய வேண்டும் என்று அல்லாஹ் நாடி விட்டால் சிறிய விபத்திலும் கூட அவரின் உயிர் பிரிந்து விடலாம். ஆனால் அவரின் உயிர் இப்போது பிரியக்கூடாது என்று அல்லாஹ் நாடி விட்டால் எவ்வளவு பெரிய விபத்தாக இருந்தாலும் தப்பித்து விடுவார். மேற்படி மலக்குகளைக் கொண்டு அல்லாஹ் தப்பிக்க வைப்பான். செல்போன் பேசிக் கொண்டே பைக் ஓட்டும் ஒருவன் எதிரில் வேகமாக லாரி வருவதைக் கூட கவனிக்காமல் இருப்பான். கடைசி நொடியில் அதைக் கவனித்து வண்டியை வேறு பக்கம் திருப்பி சிறு காயத்துடன் தப்புவான். கடைசி நேரத்தில் அந்த இரு மலக்குகள் தான்  அவனை உஷார் படுத்திப் பாதுகாத்திருப்பார்கள். 

அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் துஆவின் காரணமாக அபுல் முழஃப்பர் அவர்களின்  ஆயுள் அதிகரித்த சம்பவத்தை இங்கே சுட்டிக்காட்டலாம்

 முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்களின் காலத்தில் அபுல் முழஃப்பர் என்பவர் இருந்தார், அவர் எப்போது வியாபார விஷ.மாக வெளியூர் சென்றாலும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்களிடம் சொல்லிச் செல்வது வழக்கம். ஒருமுறை அவ்வாறு அவர் செல்லும்போது முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்களிடம் சொல்லி விட்டுச் செல்வதற்காக வந்தார், அப்போது முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்கள் நீங்கள் இப்போது செல்ல வேண்டாம் இப்பயணம் முடித்து விட்டு நீங்கள்   திரும்பும்போது உங்களுக்கு ஆபத்து வரலாம் என எச்சரித்தர்கள் அவர் கவலையுடன் திரும்பிய போது வழிய.ல் ஹம்மாத் ரஹ அவர்களை சந்தித்தார்கள் கவலைக்கு காரணம் கேட்ட போது அபுல்முழஃஃப்பர் அவர்கள் காரணத்தைக் கூற, அதற்கு ஹம்மாத் ரஹ் அவர்கள் நீங்கள் சென்று வாருங்கள். அல்லாஹ்வின் விதி அப்படி இருந்தாலும் அவன் உங்களைப் பாதுகாப்பான் என்று கூறி அனுப்பினார்கள், அவர் சென்று சரக்குகளை விற்பனை செய்து விட்டு பணப்பையுடன் திரும்பும்போது வழி.யில் சிறுநீர் கழிக்கச் செல்லும்போது ஒரு இடத்தில் பையை வைத்தார் ஆனால் அதை எடுக்க மறந்து விட்டார். அதை தாண்டி சற்று தூரம் வந்து ஓரிடத்தில் ஓய்வெடுத்த போது அயர்ந்து தூங்கினார். அதில் ஒரு கனவு கண்டார் தன்னோடு பல வியாபாரிகள் பணப்பைகளுடன் இருப்பது போலவும் அவற்றைப் பறிக்க கொள்ளைக் கூட்டம் ஆயதங்களுடன் வருவது போலவும் கனவு கண்டார். அதில் ஒரு கொள்ளையன் இவருக்கு அருகில் வந்து இவரைக் கழுத்தில் தாக்கி இவரிடமிருந்து பணப்பையைப் பறித்தான். அத்துடன் கனவு கலைந்தது. ஆனால் அருகில் யாரும் இல்லை. ஆனால் கழுத்தில் மட்டும் காயத்தின் தழும்பு இருந்த து. அப்போது தான் மறந்த பணப்பையின் நினைவு வந்தது, உடனே அந்த இடத்திற்குச் சென்றபோது அது வைத்த இடத்தில் அப்படியே இருந்தது. அவர் ஊர் திரும்பியவுடன் வழியில் ஹம்மாத் ரஹ் அவர்களைச் சந்தித்து நடந்த விஷயத்தைக் கூறியவுடன் ஹம்மாத் ரஹ் அவர்கள் கறினார்கள் நீங்கள் கனவில் பார்த்த அத்தனை விஷயங்களும் நிஜத்தில் நடைபெற வேண்டியவை ஆனால் அவையனைத்தும் அல்லாஹ் கனவில் நிகழ்த்தி அல்லாஹ் உங்களைப் பாதுகாத்துள்ளான் இதற்குக் காரணம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்கள்  தான். அவர்கள் நீங்கள் சென்றதை அறிந்த தில் இருந்து உங்களுக்காக  எழுபது தடவை துஆ செய்தார்கள். அதனால் நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள் என்றார்கள் 

வாழ்நாள் விஷயத்தில் பெற்றோரின் சாப பிரார்த்தனையும் உடனே ஏற்றுக் கொள்ளப்படும்

அல்லாமா துல்பிகார் சாஹிப் ரஹ் அவர்கள் தங்களுடைய கிதாபில் ஒரு சம்பவத்தை எழுதுகிறார்கள், முற்காலத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை  இருந்தது அப்பெண் அக்குழந்தையை தூங்க வைக்க மிகவும் கஷ்டப்படுவாள் அவ்வளவு எளிதாக அவன் தூங்க மாட்டான் ஒரு தடவை அவளுக்கு அடுப்பில் அதிகமான வேலை இருந்த து. ஆனால் மகன் எந்த வேலையையும் செய்ய விடாமல் இடுப்பிலயே தூக்கி வைக்கும்படி அடம் பிடித்தான். அந்தப் பெண் எப்படியோ பிள்ளைக்குப் பால் கொடுத்து தூங்க வைத்து விடலாம் என்று வயிறு நிறையும் அளவுக்குப் பால் தந்தாள், அவனும் தூங்கும் நிலைக்கு வந்தவுடன் அவனைப் படுக்க வைத்து விட்டு மறுபடியும் வேலையில் ஈடுபட ஆரம்பிக்கும்போது மறுபடியும் அவன் விழித்துக் கொண்டான். அப்போது அப்பெண் சங்கடப்பட்டு ஒரு வார்த்தையைச் சொன்னாள் நீ தூங்கினாயே ஒரேயடியாக தூங்கி இருக்க வேண்டாமா அதாவது இறந்திருக்க வேண்டாமா என்று கருத்தில் அவ்வாறு  கூறி விட்டாள். அல்லாஹ் அதை அப்படியே அங்கீகரித்தான். ஆனால் உடனே எதுவும் நடைபெறவில்லை. அவள் தன் மகனை நன்கு வளர்த்தாள். படிக்க வைத்தாள். அவனும் எல்லா படிப்புகளையும் படித்து நன்கு முன்னேறி பல பட்டங்களைப் பெற்றான். சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கினான். மற்றவர்கள் எல்லோரும்  இப்படித்தான் பிள்ளையை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று ஊரே மெச்சும் அளவுக்கு அவன் உயர்ந்தான். கடைசியில் ஒரு பெரிய இடத்தில் அவனுக்குப் பெண் பேசி திருமணமும் நிச்சயமானது.  அப்போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தேறியது. திருமணத்திற்கு மூன்று நாட்கள் இருக்கும்போது அவன் வீட்டில் ஏதோ ஒன்றை எடுப்பதற்காக ஒரு  ஸ்டூலில் ஏறிய போது நிலை தடுமாறி கீழே விழ, சற்று நேரத்தில் அவன் மூச்சும் அடங்கியது. வாழைப்பழத்தை அது காயாக இருக்கும்போது அறுக்காமல் அது கனிந்த பின்பு அறுப்பது போல அல்லாஹ் இதை நிகழ்த்தினான். இச்சம்பவத்தால் அவனின் தாய் பைத்தியமாகி விட்டாள். சில நாட்களுக்குப் பிறகு அந்த ஊரின் இறைநேசர் ஒருவரின் கனவில் அந்தத் தாய்  தன் பிள்ளையை திட்டிய காட்சி கனவாக காட்டப்பட்டு இதனால் தான் அவன் இறந்தான் என்பதும் கூறப்பட்டது.                                                                   

லைலத்துல் கத்ரு இரவின் அடையாளங்களில் சில...

عَنْ جَابِر بْن عَبْد اللَّه أَنَّ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ " إِنِّي رَأَيْت لَيْلَة الْقَدْر فَأُنْسِيتهَا وَهِيَ فِي الْعَشْر الْأَوَاخِر مِنْ لَيَالِيهَا طَلْقَة بَلْجَة لَا حَارَّة وَلَا بَارِدَة كَأَنَّ فِيهَا قَمَرًا لَا يَخْرُج شَيْطَانهَا حَتَّى يُضِيءَ فَجْرُهَا (تفسير ابن كثير)

 லைலத்துல் கத்ரு இரவை நான் மறக்கடிக்கப்பட்டு விட்டேன். எனவ ரமழான் மாதத்தின் இறுதிப் பத்தில் அதை தேடுங்கள். அதன் அடையாளங்களாகிறது அந்த இரவில் அதிக உஷ்ணமும் இருக்காது அதிக குளிரும் இருக்காது. நடுநிலையாக இருக்கும். மற்ற நாட்களில் ஷைத்தான் சூரியனுடன் இணைந்து வெளியாகுவதைப் போல அன்றைய இரவு முடிந்து சூரியன் உதிக்கும் போது அதனுடன் ஷைத்தான் வெளியாக மாட்டான். 

قَالَ ابْنُ عَبَّاسٍ رضي الله عنه الشَّيْطَانُ يَطْلُعُ مَعَ الشَّمْسِ كُلَّ يَوْمٍ إِلاَّ لَيْلَةَ الْقَدْرِ  قَالَ : وَذَلِكَ أَنَّهَا تَطْلُعُ يَوْمَئِذٍ لاَ شُعَاعَ لَهَا (مصنف ابن ابي شيبة) عَنِ الْحَسَنِ قَالَ:قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةٌ بَلْجَةٌ سَمْحَةٌ تَطْلُعُ شَمْسُهَا لَيْسَ لَهَا شُعَاعٌ(مصنف ابن ابي شيبة)  عَنْ أَبِى هُرَيْرَةَ رضى الله عنه قَالَ تَذَاكَرْنَا لَيْلَةَ الْقَدْرِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى

இருபத்தி ஆறாவது தராவீஹ்

 بسم الله الرحمن الرحيم  

26- வது தராவீஹ்

முன்மாதிரி இளைஞர்கள்

قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ (4) النَّارِ ذَاتِ الْوَقُودِ (5) إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ (6) وَهُمْ عَلَى مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ (7) البروج

இந்த வசனத்திற்கு விளக்கமாக தஃப்ஸீர்களில் பின்வரும் இளைஞரின் சம்பவம் கூறப்பட்டுள்ளது

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ صُهَيْبٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَ مَلِكٌ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ وَكَانَ لَهُ سَاحِرٌ فَلَمَّا كَبِرَ قَالَ لِلْمَلِكِ إِنِّي قَدْ كَبِرْتُ فَابْعَثْ إِلَيَّ غُلَامًا أُعَلِّمْهُ السِّحْرَ فَبَعَثَ إِلَيْهِ غُلَامًا يُعَلِّمُهُ فَكَانَ فِي طَرِيقِهِ إِذَا سَلَكَ رَاهِبٌ فَقَعَدَ إِلَيْهِ وَسَمِعَ كَلَامَهُ فَأَعْجَبَهُ فَكَانَ إِذَا أَتَى السَّاحِرَ مَرَّ بِالرَّاهِبِ وَقَعَدَ إِلَيْهِ فَإِذَا أَتَى السَّاحِرَ ضَرَبَهُ فَشَكَا ذَلِكَ إِلَى الرَّاهِبِ فَقَالَ إِذَا خَشِيتَ السَّاحِرَ فَقُلْ حَبَسَنِي أَهْلِي وَإِذَا خَشِيتَ أَهْلَكَ فَقُلْ حَبَسَنِي السَّاحِرُ فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ أَتَى عَلَى دَابَّةٍ عَظِيمَةٍ قَدْ حَبَسَتْ النَّاسَ فَقَالَ الْيَوْمَ أَعْلَمُ آلسَّاحِرُ أَفْضَلُ أَمْ الرَّاهِبُ أَفْضَلُ فَأَخَذَ حَجَرًا فَقَالَ اللَّهُمَّ إِنْ كَانَ أَمْرُ الرَّاهِبِ أَحَبَّ إِلَيْكَ مِنْ أَمْرِ السَّاحِرِ فَاقْتُلْ هَذِهِ الدَّابَّةَ حَتَّى يَمْضِيَ النَّاسُ فَرَمَاهَا فَقَتَلَهَا وَمَضَى النَّاسُ فَأَتَى الرَّاهِبَ فَأَخْبَرَهُ فَقَالَ لَهُ الرَّاهِبُ أَيْ بُنَيَّ أَنْتَ الْيَوْمَ أَفْضَلُ مِنِّي قَدْ بَلَغَ مِنْ أَمْرِكَ مَا أَرَى وَإِنَّكَ سَتُبْتَلَى فَإِنْ ابْتُلِيتَ فَلَا تَدُلَّ عَلَيَّ وَكَانَ الْغُلَامُ يُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَيُدَاوِي النَّاسَ مِنْ سَائِرِ الْأَدْوَاءِ فَسَمِعَ جَلِيسٌ لِلْمَلِكِ كَانَ قَدْ عَمِيَ فَأَتَاهُ بِهَدَايَا كَثِيرَةٍ فَقَالَ مَا هَاهُنَا لَكَ أَجْمَعُ إِنْ أَنْتَ شَفَيْتَنِي فَقَالَ إِنِّي لَا أَشْفِي أَحَدًا إِنَّمَا يَشْفِي اللَّهُ فَإِنْ أَنْتَ آمَنْتَ بِاللَّهِ دَعَوْتُ اللَّهَ فَشَفَاكَ فَآمَنَ بِاللَّهِ فَشَفَاهُ اللَّهُ فَأَتَى الْمَلِكَ فَجَلَسَ إِلَيْهِ كَمَا كَانَ يَجْلِسُ فَقَالَ لَهُ الْمَلِكُ مَنْ رَدَّ عَلَيْكَ بَصَرَكَ قَالَ رَبِّي قَالَ وَلَكَ رَبٌّ غَيْرِي قَالَ رَبِّي وَرَبُّكَ اللَّهُ فَأَخَذَهُ فَلَمْ يَزَلْ يُعَذِّبُهُ حَتَّى دَلَّ عَلَى الْغُلَامِ فَجِيءَ بِالْغُلَامِ فَقَالَ لَهُ الْمَلِكُ أَيْ بُنَيَّ قَدْ بَلَغَ مِنْ سِحْرِكَ مَا تُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَتَفْعَلُ وَتَفْعَلُ فَقَالَ إِنِّي لَا أَشْفِي أَحَدًا إِنَّمَا يَشْفِي اللَّهُ فَأَخَذَهُ فَلَمْ يَزَلْ يُعَذِّبُهُ حَتَّى دَلَّ عَلَى الرَّاهِبِ فَجِيءَ بِالرَّاهِبِ فَقِيلَ لَهُ ارْجِعْ عَنْ دِينِكَ فَأَبَى فَدَعَا بِالْمِئْشَارِ فَوَضَعَ الْمِئْشَارَ فِي مَفْرِقِ رَأْسِهِ فَشَقَّهُ حَتَّى وَقَعَ شِقَّاهُ ثُمَّ جِيءَ بِجَلِيسِ الْمَلِكِ فَقِيلَ لَهُ ارْجِعْ عَنْ دِينِكَ فَأَبَى فَوَضَعَ الْمِئْشَارَ فِي مَفْرِقِ رَأْسِهِ فَشَقَّهُ بِهِ حَتَّى وَقَعَ شِقَّاهُ ثُمَّ جِيءَ بِالْغُلَامِ فَقِيلَ لَهُ ارْجِعْ عَنْ دِينِكَ فَأَبَى فَدَفَعَهُ إِلَى نَفَرٍ مِنْ أَصْحَابِهِ فَقَالَ اذْهَبُوا بِهِ إِلَى جَبَلِ كَذَا وَكَذَا فَاصْعَدُوا بِهِ الْجَبَلَ فَإِذَا بَلَغْتُمْ ذُرْوَتَهُ فَإِنْ رَجَعَ عَنْ دِينِهِ وَإِلَّا فَاطْرَحُوهُ فَذَهَبُوا بِهِ فَصَعِدُوا بِهِ الْجَبَلَ فَقَالَ اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ فَرَجَفَ بِهِمْ الْجَبَلُ فَسَقَطُوا وَجَاءَ يَمْشِي إِلَى الْمَلِكِ فَقَالَ لَهُ الْمَلِكُ مَا فَعَلَ أَصْحَابُكَ قَالَ كَفَانِيهِمُ اللَّهُ فَدَفَعَهُ إِلَى نَفَرٍ مِنْ أَصْحَابِهِ فَقَالَ اذْهَبُوا بِهِ فَاحْمِلُوهُ فِي قُرْقُورٍ فَتَوَسَّطُوا بِهِ الْبَحْرَ فَإِنْ رَجَعَ عَنْ دِينِهِ وَإِلَّا فَاقْذِفُوهُ فَذَهَبُوا بِهِ فَقَالَ اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ فَانْكَفَأَتْ بِهِمْ السَّفِينَةُ فَغَرِقُوا وَجَاءَ يَمْشِي إِلَى الْمَلِكِ فَقَالَ لَهُ الْمَلِكُ مَا فَعَلَ أَصْحَابُكَ قَالَ كَفَانِيهِمُ اللَّهُ فَقَالَ لِلْمَلِكِ إِنَّكَ لَسْتَ بِقَاتِلِي حَتَّى تَفْعَلَ مَا آمُرُكَ بِهِ قَالَ وَمَا هُوَ قَالَ تَجْمَعُ النَّاسَ فِي صَعِيدٍ وَاحِدٍ وَتَصْلُبُنِي عَلَى جِذْعٍ ثُمَّ خُذْ سَهْمًا مِنْ كِنَانَتِي ثُمَّ ضَعْ السَّهْمَ فِي كَبِدِ الْقَوْسِ ثُمَّ قُلْ بِاسْمِ اللَّهِ رَبِّ الْغُلَامِ ثُمَّ ارْمِنِي فَإِنَّكَ إِذَا فَعَلْتَ ذَلِكَ قَتَلْتَنِي فَجَمَعَ النَّاسَ فِي صَعِيدٍ وَاحِدٍ وَصَلَبَهُ عَلَى جِذْعٍ ثُمَّ أَخَذَ سَهْمًا مِنْ كِنَانَتِهِ ثُمَّ وَضَعَ السَّهْمَ فِي كَبْدِ الْقَوْسِ ثُمَّ قَالَ بِاسْمِ اللَّهِ رَبِّ الْغُلَامِ ثُمَّ رَمَاهُ فَوَقَعَ السَّهْمُ فِي صُدْغِهِ فَوَضَعَ يَدَهُ فِي صُدْغِهِ فِي مَوْضِعِ السَّهْمِ فَمَاتَ فَقَالَ النَّاسُ آمَنَّا بِرَبِّ الْغُلَامِ آمَنَّا بِرَبِّ الْغُلَامِ آمَنَّا بِرَبِّ الْغُلَامِ فَأُتِيَ الْمَلِكُ فَقِيلَ لَهُ أَرَأَيْتَ مَا كُنْتَ تَحْذَرُ قَدْ وَاللَّهِ نَزَلَ بِكَ حَذَرُكَ قَدْ آمَنَ النَّاسُ فَأَمَرَ بِالْأُخْدُودِ فِي أَفْوَاهِ السِّكَكِ فَخُدَّتْ وَأَضْرَمَ النِّيرَانَ وَقَالَ مَنْ لَمْ يَرْجِعْ عَنْ دِينِهِ فَأَحْمُوهُ فِيهَا أَوْ قِيلَ لَهُ اقْتَحِمْ فَفَعَلُوا حَتَّى جَاءَتْ امْرَأَةٌ وَمَعَهَا صَبِيٌّ لَهَا فَتَقَاعَسَتْ أَنْ تَقَعَ فِيهَا فَقَالَ لَهَا الْغُلَامُ يَا أُمَّهْ اصْبِرِي فَإِنَّكِ عَلَى الْحَقِّ (مسلم

 முற்காலத்தில் வாழ்ந்திருந்த ஓர் அரசனின் அவையில் சூனியக்காரன் ஒருவன் இருந்து வந்தான். அவன் சூனியக்கலையில் நன்கு தேர்ச்சி பெற்றவன் வயோதிபமடைந்து விட்ட அவன் ஒருநாள் அரசனிடம் “நான் வயோதிபமடைந்து விட்டேன். விரைவில் இறந்துவிடுவேன் என்று பயப்படுகிறேன். அவ்வாறு நான் இறந்து விட்டால் என்னுடைய கலை என்னுடனேயே முடிந்துவிடும் அதனை நீங்கள் பயன்படுத்த தேவைப்படுகின்றபோது யாரும் இருக்கமாட்டார்கள். ஆகையால் அறிவுக்கூர்மையான ஓர் இளைஞனைத் தேடிக்கொண்டு வாருங்கள் அவனுக்கு என்னுடைய கலைகளைக் கற்றுக் கொடுக்கிறேன். என்று கூறினான். அவ்வாறே கூர்மையான அறிவுடைய வாலிபன் ஒருவனை தேடிக்கொண்டு வந்து “நீ தினந்தோறும் இங்குவந்து இவர் கற்றுத்தரும் கலைகளைக் கற்றுக்கொண்டு செல்ல வேண்டும்“ என்று அரசன் கட்டளையிட்டான். அவ்வாறே அவ்வாலிபன் தன் வீட்டில் இருந்து அந்த சூனியக்காரன் இருக்கும் இல்லத்திற்கு வந்து கலைகளைக் கற்றுக்கொண்டு வந்தான்.

வாலிபன் தன் வீட்டில் இருந்து சூனியக்காரனுடைய இல்லத்திற்கு வந்து செல்லும் வழியில் ராஹிப் என்று சொல்லக்கூடிய ஒரு மதப்போதகர் ஒருவர் இருந்தார் அவரிடம் மார்க்கம் படிப்பதற்காக சிலர் கூடியிருப்பார்கள் அவர்ஆத்ம ஞானங்களை கற்றுக்கொடுப்பார்.அவ்வாலிபன் அவ்வழியாக சூனியக்காரனிடம் செல்லும் போதெல்லாம் அந்த ராஹிபிடம் சென்று அவர் கூறுகின்ற ஆத்ம உபதேசங்களையும் செவியேற்றுச் செல்வான். இதனால் தாமதித்து வருவதற்காக சூனியக்காரனும் வீட்டில் உள்ளவர்களும் ஏசவும் அடிக்கவும் செய்தனர்.இச் செய்தியை ராஹிப் என்ற ஞானியிடம் அவன் தெரியப்படுத்தினான். முஸ்லிம் அல்லாத பையைன் தம்மிடத்தில் வருவதை இருவரும் கேள்வியுற்றால் இங்கு ஆத்ம ஞானம் கற்றுக்கொள்ளமுடியாதுபோய்விடும் என்பதை அறிந்த ராஹிப் அவனிடம் “நீ வீட்டுக்குச் சென்றால் சூனியக்காரன் பிற்படுத்திவிட்டான் எனக்கூறு. தாமதம் பற்றி சூனியக்காரன் கேட்டால் வீட்டில் பிற்படுத்தி விட்டார்கள் எனக்கூறு என தந்திரம் சொல்லிக்கொடுத்தார் இவ்வாறே அவன் சிலகாலம் செய்து வந்தான்.

ஒரு நாள் அவன் வரும்வழியில் ஒரு பெரிய சிங்கம் ஒன்று நின்று கொண்டு அவ்வழியே எவரும் செல்ல முடியாவண்ணம் தடுத்து நின்றது. பீதியடைந்த மக்கள் போகமுடியாமல் அங்கலாய்த்துக் கொண்டு நின்றனர். அடிக்கடி ஏற்படும் இவ்வாறான துன்பத்திற்கு விடிவுகாண முடியாமல் இருந்தசமயம் இந்த வாலிபனுக்கு ஒரு யோசனை தோன்றியது மத விவகாரத்தில் உண்மை புலப்பட வேண்டும் என விரும்பினான் எனக்கு சூனியம் படிப்பிக்கும் ஆசான் சிறந்தவரா ஆத்ம ஞானம் கற்பிக்கும் ராஹிப் சிறந்தவரா என அறிய வேண்டும். என எண்ணியவனாக ஒரு கல்லை எடுத்து “யா அல்லாஹ்“ இந்த ராஹிப் உன்னுடைய விடயத்தில் இந்த சூனியக்காரனை விட பிரியமானவராக இருந்தால் இந்த மிருகத்தை நீ கொலைசெய்து விடுவாயாக! என்று கூறியவனாக அக்கல்லை அந்த மிருகத்தை நோக்கி எறிந்தான் கல்பட்டவுடன் அது இறந்து விட்டது மக்கள் அவ்வாலிபனைப்புகழ்ந்து அவனுக்கு தனிப்பட்ட ஞானம் இருப்பதாக பேசிக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை றாஹிபிடம் வாலிபன் தெரிவித்தான். இதைக்கேட்ட ராஹிப் மகனே! இன்று நீ என்னை விடச்சிறந்தவனாக இருக்கின்றாய் நீ உயர்ந்த நிலையை அடைந்துள்ளாய் விரைவில் தீய சோதனைக்கு உள்ளாக்கப்படுவாய் அவ்வாறு நிகழ்கின்ற நேரத்தில் என்னைக் காட்டிக் கொடுத்து விடாதே! என்று அவனிடம் கூறினார். அதன் பிறகு அவ்வாலிபன் பல நோயாளிகளைக் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றவனாக விளங்கினான். குஷ்டரோகிகளையும் குணமடையச்செய்தான். மக்கள் சாரிசாரியாக வந்து தங்கள் நோய்களுக்கு அவனிடம் மருந்த கேட்டுச்சென்றனர்.

அவ்வூரில் அரசனுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். அவர் கண்பார்வை இழந்தவர் வாலிபனுடைய செய்தியைக்கேள்விப்பட்டு ஏராளமான வெகுமதிகள் பணங்களை எடுத்துக்கொண்டு அவனிடம்வந்து நீ என்னுடைய கண்களைப் பார்வையுடையதாக ஆக்கிவிட்டால் உனக்கு இவைகளைத் தருகிறேன் என்று கூறினார்.அதற்கு அந்த வாலிபன் “நான் யாருக்கும் சுகமளிப்பவனல்ல சுகமளிப்பவனெல்லாம் அந்த அல்லாஹ்தான் எனவே உம்முடைய அன்பளிப்புகள் எனக்குத்தேவையில்லை நீங்கள் அல்லாஹ்வை விசுவாசம் கொண்டு ஈமான் கொள்வதாகக் கூறினால் நான் அல்லாஹ்விடத்தில் துஆச் செய்கிறேன். அவன் உமக்குப்பார்வையை அளிப்பான் என்று கூறினான். அவ்வாறே அவர் ஈமான் கொண்டார் துஆச் செய்ததும் அவருக்கு பார்வை கிடைக்கப்பெற்று சுகம் கிடைத்தது இறைவனைப் புகழ்ந்தார்.

பார்வை கிடைக்கப்பெற்ற அவர் வழக்கம் போல அரசனிடம் அருகில் அமர்ந்தார். தட்டுத்தடுமாறி வந்துஅமரும் அவர் திறந்த கண்ணோடு வந்தமர்ந்ததைப் பார்த்த அரசன் வியப்புற்று உமக்கு பார்வையை அளித்தவர் யார் எனக்கேட்டார் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்தான் பார்வை கிடைத்தது என்றபடியால் எனது இரட்சகன் அல்லாஹ் என்று கூறினார். எல்லாம் உனக்கு எல்லாம் உனக்கு நானாக இருக்க வேறு அல்லாஹ்வின் பெயர் கூறுகிறாயா? ஆம் எனக்கும் உமக்கும் றப்பு அல்லாஹ்தான் என்று கூற இவனுக்கு பரிகாரம் செய்தவனைக்கேட்டுத் துன்புறுத்தினான். வேதனை தாங்கமுடியாமல் வாலிபனைப்பற்றிச் சொன்னான் உடனே வாலிபனை கொண்டுவரச் செய்து நான் உன்னை சூனியம்படிக்கச் வைத்து அதன் மூலம் நோய்களைத் தீர்க்கும் வல்லமை உமக்கு கிடைக்க சமயம் மாறி துரோகமிழைத்து விட்டாய் எனநோவினை செய்தான் அவ்வாலிபன் குணம் கொடுப்பது அல்லாஹுத்தஆலாதான் என்று கூற உமது குரு யார் இதைக்கற்றுத்தந்தவர் யார் எனக்கேட்டு விடாப்பிடியாக வேதனை செய்தான். அதனால் அந்த றாஹிபையும் சொல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட றாஹிபும் கொண்டுவரப்பட்டார். அவரையும் மார்க்கத்தை விட்டுவிட வேண்டும் என துன்புறுத்தப்படவே அவர் மறுத்தார் இவ்வாலிபன் முன்பதாகவே கண்பார்வை கிடைத்தவரையும் இவரின் ஞானகுரு றாஹிபையும் சிரச்சேதம் செய்து கொண்று விட்டான். உமக்கும் இதே கதிதான் உனது மார்க்கத்தை விட்டுவிடு எனக்கூறினான். அவன் மறுத்துக் கொண்டே இருந்தான்.

ஆத்திரமடைந்த அரசன் சேவகர்களில் சிலரைஅழைத்து இவனை மலைஉச்சிக்கு கொண்டு சென்று நிற்கவைத்து உயிர் போகுமுன் உமது மார்க்கத்தை விட்டுவிடும் படி இறுதியாகக் கேளுங்கள் ஒப்புக்கொண்டால் அழைத்து வந்து விடுங்கள். இல்லையானால் மலை உச்சியில் இருந்து கீழே உருட்டிவிடுங்கள் சிதறி சாகட்டும் எனசொல்லியனுப்பினான். அவர்கள் அவ்வாலிபனை கட்டி இழுத்துக்கொண்டு மலை உச்சிக்கு கொண்டு சென்றனர். மலையில் ஏறும் போது அவ்வாலிபன் “யா அல்லாஹ்“ நீ நாடிய விதத்தில் இவர்களுடைய விடயத்தில் எனக்கு போதமானவனாக இரு றஹ்மானே! என துஆ செய்தான். அக்கணமே மலை அதிர்ந்து அழைத்து வந்த சேவகர்களும் பாக்கியில்லாமல் மலையில் இருந்து உருண்டு விழுந்து இறந்து போயினர். அவ்வாலிபன் எவ்வித ஆபத்துமின்றி அங்கிருந்து மறுபடியும் அரச சபைக்கு வந்தான். அவனை பார்த்த அரசன் உன்னுடன் வந்தவர்கள் என்னவானார்கள் என்று கேட்டான். “அல்லாஹ்“ அவர்களை அழித்து என்னைக் காப்பாற்றினான். என்று கூறினான்.மறுபடியும் அரசன் தன் சேவகர்களில் சிலரை அழைத்து இவனைக் கொண்டு போய் ஒரு படகில் ஏற்றி நடுக்கடலில் சென்றதும் இவன் தனது மார்க்கத்தை விட்டு விட்டால் அழைத்துவாருங்கள் மறுத்தால் கடலில் தள்ளிவிடுங்கள் என்று அனுப்பிவைத்தான். அவர்கள் அவ்வாலிபனை ஒரு படகில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அவ்வாலிபன் படகில் வைத்து இறைவா நீ நாடியவிதத்தில் இவர்களுடைய விடயத்தில் எனக்கு நீ போதுமாக்கி விடுவாயாக என்று துஆச் செய்தான். அக்கணமே படகு கவிழ்ந்து வாலிபன் காப்பாற்றப்பட்டு அவர்கள் அனைவரும் மூழ்ககடிக்கப்பட்டனர். எவ்வித ஆபத்துமின்றி மீண்டும் அரசனிடம் வந்தான் உன்னோடு வந்தவர்கள் என்ன ஆனார்கள் என அரசன் கேட்டபோது “அல்லாஹுத்தஆலா அவர்களை அழித்து என்னைக் காப்பாற்றினான். என்று கூறினான் வாலிபன். பிறகு அந்த வாலிபன் அரசனிடம் “நான் சொல்லும் முறைப்படி செய்யாத வரை நீர் என்னைக் கொல்லமுடியாது“ என்று கூறினான். அது என்ன? என்றான் அரசன். ஒரு பெரிய மைதானத்தில் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டும். அங்கு என்னை ஒரு மரத்தி்ல் ஏற்றி எனது அம்புக்கூட்டில் இருந்து ஒரு அம்பை எடுத்து

بسم الله ربَ الغلام

“பிஸ்மில்லாஹி றப்பில் உலாமி” இவ்வாலிபனுடைய இரட்சகனான அல்லாஹுத்தஆலாவின் திருநாமத்தால் என்று கூறி அம்பை என் மீது எறிந்தால் என்னைக் கொல்லலாம் என்று கூறினார்.அவ்வாறே அரசன் ஒரு மைதானத்தில் நகர மக்களை எல்லாம் ஒன்று கூட்டி அவ்வாலிபனை தூக்குமேடையில் நிறுத்தி அவனுடைய அம்புக்கூட்டினுள் இருந்து ஒரு அம்பை எடுத்து வில்லில் வைத்து பிஸ்மில்லாஹி றப்பில் உலாமி என்று கூறி எய்தினான் அந்த அம்பு அவ்வாலிபனுடைய நெற்றிப்பொட்டில் பட்டது அவன் தன் கையை அப்பொட்டின் மீது வைத்தவனாக கீழே விழுந்தான் அதே இடத்தில் அவன் உயிர் பிரிந்தது.

இக்காட்சியை கண்ட அங்கிருந்த மக்கள் “இந்தவாலிபனுடைய இரட்சகனைக் கொண்டு நாங்கள் ஈமான் கொள்கிறோம். என்று மூன்று முறை சப்தமிட்டுக் கூறினார்கள். அரசன்முகத்தில் கரி பூசியதைப்போல் ஒருமித்த குரலில் அரசனே! நீ எதைப்பயந்தாயோ அது நடந்துவிட்டது. மக்கள் அனைவரும் ஏகத்துவத்தை ஏற்று ஈமான் கொண்டு விட்டார்கள் என்று கூறினார்கள். ஆத்திரமடைந்த அரசன் என்னை எதிர்த்த இப்பயலுக்கு நான் கொடுத்த தண்டனை இது வென்றால் இதைவிட பெரிய தண்டனை உங்களுக்கு என்று ஊரில் உள்ள விறகுகளை எல்லாம் சேகரித்து பாரிய நெருப்புக்கிடங்கொன்றை ஏற்படுத்தி அல்லாஹுவை ஈமான் கொண்டவர்களை நெருப்புக்கிடங்குகளுக் கண்மையில் நிறுத்தி புதிய மார்க்கத்தை விட்டு விடுகிறீர்களா என்று கேட்டு அதற்கு அவர்கள் மறுத்தால் நெருப்புக்கிடங்கில் தள்ளிவிட்டு அநியாயமாக கொலைசெய்து கொண்டிருந்தான். நெருப்புக்கு பயந்தவர்களும் ஈமானில் உறுதியில்லாதவர்களும் விடுதலையளிக்கப்பட்டனர்.

அவர்களின் ஒரு பெண் பால்குடிக்கும் தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தாள். நீ உன் மார்க்கத்தை விட்டு விடுகிறாயா? என்று அவளிடம் கேட்டபோது அவள் நெருப்புக்குண்டத்தையும் தன் அருமைக் குழந்தையையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு தன் குழந்தைக்காக ஈமானை விட்டுவிட எண்ணினாள். அப்போது அக்குழந்தை பேசியது. எனது தாயே! நீ சத்தியத்தின் மீது இருக்கின்றாய். நீ பயப்படவேண்டாம் இதைவிட பெரியநெருப்பை நான் காண்கிறேன். இந்த நெருப்பில் விழவில்லையானால் அந்த நெருப்பை நீ அணைக்க முடியாது. என்று பேசாத பச்சிளம் குழந்தை பேசியது. உடனே அப்பெண் அக்குழந்தையுடன் நெருப்புக்குண்டத்தில் வீழ்ந்து விட்டாள் இவ்வாறு ஈமானில் அதிகமானவர்கள் இருந்தார்கள். ஆக 11பேர்கள் மட்டும்தான் காப்பாற்றப்பட்டனர்.

இறை நீதி இவனை சும்மா வைக்கவில்லை திருக்குர்ஆனில் சூறத்துல் புறுஜில் இச்சம்பவத்தை மையமாகக் கொண்டு அரசனும் அவனைச் சேர்ந்தவர்களும் நெருப்புக்குண்டத்தை சுற்றி உக்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த போதே அந்த நெருப்பு பொங்கி எழுந்து பறந்துவந்து அரசனையும் மற்றவர்களையும் நாசமாக்கிவிட்டது. என “தப்ஸீர் ஸாவீ“ எனும் கிரந்தத்தில் விளக்கவுரை வழங்கப்பட்டுள்ளது.

70 ஆண்டுக்கு முன் நடைபெற்ற இச்சம்பவத்தை றஸுலே கரீம் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சுஹைப் (றழி) அவர்கள் கூறிய விடயம் முற்றுப்பெற்று உமர்(றழி) அவர்கள் ஆட்சியின் போது நஜ்ரான் தேசத்தில் அன்று வாழ்ந்த ஒரு மனிதர் ஒரு தேவைக்காக குழியொன்று தோண்டிக் கொண்டிருந்த போது அங்கு ஒருவாலிபரின் சடலம் இருந்தது. தன் கையை நெற்றிப்பொட்டின் மீது வைத்தவாறு இரத்தம் கசிய அவ்வாலிபனின் சடலம் இருந்தது. அவ்வாலிபனின் விரலில் இருந்த மோதிரத்தில் ربّي اللّه 

 ரப்பியழ்ழாஹு எனது இரட்சகன் அல்லாஹ் எனும் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த விடயத்தை கலீபாவாக இருந்த உமர் (றழி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது அச்சடலத்தை இருந்தபடியே வைத்துவிடுங்கள். அது அப்துல்லாஹிப்னு தாமிர் எனும் இறைவிசுவாசம் கொண்டு கொல்லப்பட்ட சரித்திரமிக்க வாலிபனின் சடலம்தான் என விளக்கம் கூறினார்கள். இறைபாதையில் உயிர் நீர்த்தவர்களை மண் பாதுகாப்பாக வைத்திருக்கும் என்பதற்கு இது சான்றாகும். உயிரை இழந்தேனும் ஈமானைக் காப்பாற்ற வேண்டும் என்பதும் படிப்பினையாகும்.

மற்றொரு முன்மாதிரியான இளைஞர்

أن رجلا من الأنصار يقال له : ثعلبة بن عبد الرحمن رضي الله عنه، يخدم النبي صلى الله عليه وسلم في جميع شؤونه وذات يوم بعثه رسول الله صلى الله عليه وسلم في حاجة له، فمر بباب رجل من الأنصار فرأى امرأة تغتسل وأطال النظر إليها، ثم بعد ذلك أخذته الرهبة وخاف أن ينزل الوحي على رسول الله صلى الله عليه وسلم بما صنع، فلم يعد إلى النبي ودخل جبالا بين مكة والمدينة، ومكث فيها قرابة أربعين يوماً، وبعد ذلك نزل جبريل على النبي صلى الله عليه وسلم فقال: يا محمد إن ربك يقرئك السلام ويقول لك:إن رجلاً من أمتك بين حفرة في الجبال متعوذ بي، فقال النبي صلى الله عليه وسلم لعمر بن الخطاب وسلمان الفارسي: انطلقا فأتياني بثعلبة بن عبد الرحمن فليس المقصود غيره فخرج الاثنان من أنقاب المدينة فلقيا راعيا من رعاة المدينة يقال له زفافة، فقال له عمر:هل لك علم بشاب بين هذه الجبال يقال له ثعلبة؟ فقال لعلك تريد الهارب من جهنم؟ فقال عمر: وما علمك أنه هارب من جهنم قال لأنه كان إذا جاء جوف الليل خرج علينا من بين هذه الجبال واضعا يده على أم رأسه وهو ينادي يا ليتك قبضت روحي في الأرواح، وجسدي في الأجساد.. ولم تجددني لفصل القضاء فقال عمر: إياه نريد، فانطلق بهما فلما رآه عمر غدا إليه واحتضنه فقال: يا عمر هل علم رسول الله صلى الله عليه وسلم بذنبي؟ قال لا علم لي إلا أنه ذكرك بالأمس فأرسلني أنا وسلمان في طلبك، قال يا عمر لا تدخلني عليه إلا وهو في الصلاة فابتدر عمر وسلمان الصف في الصلاة فلما سلم النبي عليه الصلاة والسلام قال يا عمر يا سلمان ماذا فعل ثعلبة؟ قال: هو ذا يا رسول الله فقام الرسول صلى الله عليه وسلم فحركه وانتبه فقال له الرسول صلى الله عليه وسلم : ما غيبك عني يا ثعلبة ؟ قال ذنبي يا رسول الله قال أفلا أدلك على آية تمحو الذنوب والخطايا؟ قال بلى يا رسول الله، قال: قل ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، قال: ذنبي أعظم، قال الرسول صلى الله عليه وسلم: بل كلام الله أعظم، ثم أمره بالانصراف إلى منزله فمر من ثعلبة ثمانية أيام ثم أن سلمان أتى رسول الله فقال: يا رسول الله هل لك في ثعلبة فانه لما به قد هلك؟ فقال رسول الله: فقوموا بنا إليه ودخل عليه الرسول صلى الله عليه وسلم فوضع رأس ثعلبة في حجره لكن سرعان ما أزال ثعلبة رأسه من على حجر النبي فقال الرسول صلى الله عليه وسلم له: لم أزلت رأسك عن حجري؟ فقال لأنه ملآن بالذنوب، قال رسول الله ما تشتكي؟ قال : مثل دبيب النمل بين عظمي ولحمي وجلدي، قال الرسول الكريم: ما تشتهي؟ قال مغفرة ربي فنزل جبريل عليه السلام فقال: يا محمد إن ربك يقرئك السلام ويقول لك لو أن عبدي هذا لقيني بقراب الأرض خطايا لقيته بقرابها مغفرة، فأعلمه النبي بذلك فصاح صيحة بعدها مات على أثرها فأمر النبي بغسله وكفنه، فلما صلى عليه الرسول عليه الصلاة والسلام جعل يمشي على أطراف أنامله، فلما انتهى الدفن قيل لرسول الله صلى الله عليه وسلم، يا رسول الله رأيناك تمشي على أطراف أناملك  قال والذي بعثني بالحق ما قدرت أن أضع قدمي على الأرض من كثرة أجنحة من نزل من الملائكة لتشييعه رواه  ابو نعيم    (ضعيف)

 ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி {ஸல்} அவர்களுக்கு பணிவிடைகள் செய்த நபித்தோழர்களில், அன்ஸாரிகளைச் சார்ந்த ஸஅலபா இப்னு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களும் ஒருவர். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அன்றொரு நாள் ஸஅலபா (ரலி) அவர்களை ஏதோ பணி நிமித்தமாக எங்கோ அனுப்பினார்கள். சென்ற ஸஅலபா (ரலி) அவர்கள் மீண்டும் அண்ணலாரின் சமூகத்திற்கு வரவே இல்லை. அண்ணலாரும் அவர் வருவார். நியமித்த பணியை நிறைவேற்றி விட்டு இதோ இன்று வந்து விடுவார், நாளை வந்து விடுவார் என எதிர்பார்த்து காத்து இருந்தார்கள்.நாட்கள் மட்டும் அடுத்தடுத்து வந்ததே தவிர ஸஅலபா (ரலி) அவர்கள் இன்னும் வரவில்லை.ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, ஒரு வாரம் இரண்டு வாரம் அல்ல நாற்பது நாட்கள் நகர்ந்து விட்டது இன்னும் ஸஅலபா வரவில்லை.எங்கு போனார்? என்ன ஆனார்? அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில், ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ”அண்ணலாரின் சமூகத்திற்கு வருகை தந்து அல்லாஹ் ஸலாம் சொல்லி அனுப்பியதாகவும், உங்களிடம் உங்களது தோழர் ஒருவர் மக்கா, மதீனாவிற்கு இடையே இருக்கிற மலை முகடு ஒன்றில் இருந்து அல்லாஹ்விடம் கடந்த நாற்பது நாட்களாக பாவமன்னிப்பையும், நரக ஈடேற்றத்தையும் கேட்டு மன்றாடிக் கொண்டிருக்கிறார் என்கிற செய்தியை சொல்லி விட்டு வருமாறு என்னை அனுப்பி வைத்திருக்கின்றான்” என்று கூறி விடை பெற்றுச் சென்றார்கள்.உடனே, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இந்த மன்றாட்டத்திற்கு உரியவர் காணாமல் போன ஸஅலபாவாகத் தான் இருக்கும் என்று தீர்மானித்து விட்டு, உமர் மற்றும் ஸல்மான் (ரலி – அன்ஹுமா) ஆகியோரை அழைத்து ”என்னிடம் ஸஅலபாவைக் கொண்டு வாருங்கள்!” என்று பணித்தார்கள்.இருவரும் ஸஅலபாவைத் தேடி மக்கா, மதீனாவிற்கு இடையே இருக்கிற மலைப்பகுதியின் அடிவாரத்திற்கு வந்து, அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த துஃபாஃபா என்கிற இடையனிடம் ஸஅலபா குறித்தும், அவரின் மன்றாட்டம் குறித்தும் கூறி விசாரித்தார்கள். அதற்கு, அந்த இடையர் ஆம்! சமீப நாட்களாக இங்கே வசிக்கிற நாங்கள் “என் ஆன்மாவைக் கைப்பற்றும் ஆற்றல் கொண்டவனே! என் உடலை மீட்டும் ஆற்றல் பெற்றவனே! நாளை மறுமையில் என்னைத் தண்டித்து விடாதே! எனக்கு நரகத்தை விட்டும் நீ பாதுகாப்புத் தர வேண்டும்!”என்று ஒருவர் மன்றாடுவதை கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.நீங்கள் சொன்ன இன்னின்ன அடையாளம் கொண்ட அந்த நபரை நான் பார்த்திருக்கின்றேன். இதோ இந்த பகுதியில் தான் அவர் இருப்பார். இன்னும் சற்று நேரத்தில் அவரின் மன்றாட்டம் கேட்கும் என்றனர் சற்று நேரம் தாமதித்த பின்னர், மலை முகட்டில் இருந்து ஸஅலபா (ரலி) அவர்களின் மன்றாட்டம் ஒலித்தது. ஒலி வந்த திசையை நோக்கி இருவரும் நடந்து ஸஅலபா (ரலி) அவர்களை அடைந்து கொண்டனர். இருவரையும் பார்த்த ஸஅலபா (ரலி) அவர்கள் மீண்டும் அழுதார்கள். அப்போது, உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ் உம்மை மன்னிப்பான். உம்மை நரகில் இருந்து பாதுகாப்பான்!” நபி {ஸல்} அவர்கள் உம்முடைய இந்த மன்றாட்ட நிலை குறித்து கேள்வி பட்டு நேற்று அழுதார்கள். மேலும், உம்மை அழைத்து வருமாறு எங்களிடம் கூறி இங்கே அனுப்பி வைத்திருக்கின்றார்கள்.” வாருங்கள்! ஸஅலபா செல்வோம்” என்றார்கள்.

இது கேட்ட ஸஅலபா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நான் செய்த பாவம் குறித்து அறிந்து கொண்டார்களா?” என்று வினவினார். இல்லை என்று உமர் (ரலி) பதில் பகர்ந்ததும் அப்படியானால், நபி {ஸல்} அவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் என்னை அழைத்துச் செல்லுங்கள்! பாவியான நான் அண்ணல் நபி {ஸல்} அவர்களை முகம் பார்த்து பேச வெட்கப்படுகின்றேன்!” என்று கூறினார்கள். அவரை அழைத்துக் கொண்டு இருவரும் மஸ்ஜிதுன் நபவீக்கு வந்து இஷாத் தொழுகையின் இகாமத்தை பிலால் (ரலி) அவர்கள் கூறும் வரை காத்திருந்து பின்னர் தொழுகை ஆரம்பித்ததும் தொழுகையில் இணைந்து கொண்டனர்.அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தொழுகையில் அத் தகாஸுர் சூராவை ஓதினார்கள். முதல் இரு வசனங்களை கேட்ட மாத்திரத்திலேயே ஸஅலபா (ரலி) மயக்கமாகி கீழே விழுந்து விட்டார்கள். தொழுகை முடிந்ததும் உமர் மற்றும் ஸல்மான் (ரலி) இருவரையும் கண்ட பெருமானார் {ஸல்} அவர்கள் எங்கே ஸஅலபா? என்று கேட்டார்கள்.இதோ! அல்லாஹ்வின் தூதரே! மயக்கமுற்று கீழே விழுந்து கிடக்கின்றார் என்றார்கள் இருவரும்.முகத்தில் தண்ணீர் தெளித்து, அருகே அமர வைத்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அன்பொழுக “ஸஅலபா! உமக்கு என்ன நேர்ந்து விட்டது? ஏன் இவ்வளவு நாளாக எங்கு சென்றீர்?” என்று கேட்டார்கள்.”லப்பைக்க யாரஸூலுல்லாஹ்! நான் செய்து விட்ட ஒரு பாவம் தான் அல்லாஹ்வின் தூதரே! காரணம்” என்றார் நா தழுதழுத்தவராக!”யாஅல்லாஹ்! இவ்வுலகிலகிலும் எனக்கு நீ சிறந்ததைக் கொடு! மறுமையிலும் சிறந்ததைக் கொடு! மேலும், நரக வேதனையில் இருந்து என்னைக் காத்துவிடு!” என்று இறைஞ்சுங்கள்” உமது பாவத்திற்கு பரிகாரமாக அமைந்து விடும் என்று பெருமானார் {ஸல்} அவர்கள் கூற,இல்லை, அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய பாவம் மிகப் பெரியது! என்றார் ஸஅலபா (ரலி). தோழரே! அல்லாஹ்வின் வார்த்தை அதை விட மிகப் பெரியது! இதைக் கூறுங்கள் அல்லாஹ் உம் குற்றங்களை மன்னிப்பான்” என்றார்கள்.மீண்டும் அவர் முன்பு போல் கூறவே, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் அவரின் வீட்டில் கொண்டு விட்டு வருமாறு தோழர்களிடம் கூறினார்கள்.வீட்டிற்குச் சென்ற ஸஅலபா இந்தக் கவலையால் நோய்வாய்ப் பட்டு படுத்த படுக்கையானார். எட்டு நாட்கள் ஆகியும் அவர் பள்ளிக்கு வரவில்லை.அப்போது, ஸல்மான் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நாம் சென்று ஸஅலபாவை நலம் விசாரித்து விட்டு வருவோமே! அவர் எட்டு தினங்களாக பள்ளிக்கும் வரவில்லை. அவர் குறித்து எந்தத் தகவலும் இல்லை” என்றார்கள்.நபி {ஸல்} அவர்கள் அங்கிருந்த தோழர்களை அழைத்துக் கொண்டு ஸஅலபா (ரலி) வீட்டிற்கு சென்றார்கள்.படுத்த படுக்கையாய் கிடக்கிற ஸஅலபாவின் தலையை தங்களது புனித மடியில் கிடத்தி “ஸஅலபாவே! உமக்கு என்ன? நீர் அப்படி என்ன தான் பாவம் செய்து விட்டீர்? என்று கேட்டார்கள்.அப்போது, ஸஅலபா (ரலி) அவர்கள் “எனக்கு இன்ன வேலையைச் செய்து வருமாறு என்னை நீங்கள் அனுப்பிய போது, அதைச் செய்வதற்காக நான் விரைந்து போய்க்கொண்டிருந்தேன்! மதீனாவின் இன்ன தெருவைக் கடந்து செல்கிற போது வீட்டின் கொல்லைப் புறத்தில் ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்தார்.நான் என்னையும் அறியாமல் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தேன். பின்பு அது பாவம் எனத் தெரியவே அங்கிருந்து விலகி விட்டேன். என்றாலும், அல்லாஹ் என்னுடைய இந்த பாவம் குறித்து, ஏதேனும் இறைவசனத்தை இறக்கி தண்டித்து விடுவானோ என நான் பயந்து மலை முகட்டுக்குச் சென்று விட்டேன்” என்று கூறினார்.அல்லாஹ்வின் தூதரே! இந்த மாபெரும் பாவத்தை அல்லாஹ் மன்னிப்பானா? என்னையே நான் வெறுக்கின்றேன்! என் உடல் முழுவதும் புழு பூச்சிகள் ஊர்ந்து செல்வது போல் அருவருப்பாக உணர்கின்றேன் என்றார் ஸஅலபா.அப்போது, அங்கே வருகை தந்தார்கள் வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள். தொடர்ந்து “அல்லாஹ் ஸலாம் சொல்லி அனுப்பியதாகவும், உங்களிடம் என்னுடைய அடியான் பூமி முழுவதும் பாவத்தோடு என்னை நெருங்கி வந்தால், அதே பூமி முழுவதும் மன்னிப்போடு நான் அவனை நெருங்கி வருகின்றேன்” இதோ! இவரின் பாவத்தை அல்லாஹ் மன்னித்து விட்டான்” என்கிற செய்தியை சொல்லி விட்டு வருமாறு என்னை அனுப்பி வைத்திருக்கின்றான்” என்று கூறி விடை பெற்றுச் சென்றார்கள்.

ஸஅலபாவே! உமக்கு ஒரு விஷயத்தை நான் சொலட்டுமா? என்று கூறிவிட்டு அல்லாஹ் உம்மை மன்னித்து விட்டான் என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். இது கேட்ட ஸஅலபா (ரலி) பெரும் சப்தம் ஒன்றை எழுப்பியவாறு மரணித்து விட்டார்கள். இன்னாலில்லாஹ்… பின்னர் நபி {ஸல்} அவர்கள் அவருக்கு குளிப்பாட்டுமாறும், கஃபன் செய்யுமாறும் ஆணையிட்டு விட்டு அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.அதன் பின்னர், அவரின் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்ற நபி {ஸல்} அவர்கள் தங்களின் பெருவிரலால் ஊன்றி, ஊன்றி மிகவும் சிரமப்பட்டு நடந்து சென்றார்கள். மண்ணறையில் அடக்கம் செய்து முடித்ததும், நபித்தோழர்கள் இது குறித்து வினவிய போது, அவரின் ஜனாஸாவை மலக்குமார்களில் லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து வந்தனர். எங்கு நோக்கினும் வானவர்கள் இறக்கைகளையே நான் கண்டேன். வானவர்களின் இறக்கைகளை மிதித்து விடாதிருக்கவே நான் அவ்வாறு பெரு விரலால் நடந்து வந்தேன்” என்று பதில் கூறினார்கள்.

அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமான தவ்பா ஒரு இளைஞனின் தவ்பா

مَا مِنْ شَيْءٍ أَحَبُّ إِلى الله تَعَالَى مِنْ شَابَ تَائِبٍ وَمَا مِنْ شَيْءٍ أَبْغَضُ إِلَى الله تَعَالَى مِنْ شَيْخٍ مُقِيمٍ عَلَى مَعَاصِيهِ ، وَمَا فِي الحَسَنَاتِ حَسَنَةٌ أَحَبُّ إِلَى الله تَعَالَى مِنْ حَسَنَةٍ تُعْمَلُ فِي لَيْلَةِ جُمُعَةٍ أَوْ يَوْمِ جُمُعَةٍ وَمَا مِنَ الذُّنُوبِ ذَنْبٌ أَبْغَضُ إِلَى الله تَعَالَى مِنْ ذَنْبٍ يُعْمَلُ فِي لَيْلَةِ الجُمُعَةِ أَوْ يَوْمِ الجُمُعَةِ (كنز العمال

வாலிப வயதில் இருந்தே வணக்க வழிபாட்டில் ஈடுபடுபவருக்கு அர்ஷின் நிழல்

அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,

Monday, March 24, 2025

இருபத்தி ஐந்தாவது தராவீஹ்

 بسم الله الرحمن الرحيم  

25- வது தராவீஹ்

எழுத்தும் வாசிப்பும்

ن وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ (1)

எழுதுகோலின் மீது சத்தியமாக

திருமறையில் எழுதுகோலின் முக்கியத்துவம்

  மனிதன் கல்வியறிவு பெற்றிட மிக அவசியமான இரு விஷயங்களான வாசித்தல், எழுதுதல் இரண்டிற்கும் திருக்குர்ஆன் எத்துணை முக்கியத் துவம் வழங்கியுள்ளது என்று நாம் காண்போம். எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் சூரத்துல் அலக் உடைய மூன்றாம் நான்காம் வசனங்களில் “(நபியே!) நீர் ஓதுவீராக! உமது இறைவன் தான் எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்பித்தான்” என்று கூறுகிறான். நமது தமிழ் இலக்கியத்திலும் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்று கூறப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இதன் சரியான பொருள் மனிதனுக்கு முதன் முதலாக எழுத்தறிவை அளித்தவன் இறைவனே.

عَنْ أَبِي هُرَيْرَة سَمِعْت رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُول " إِنَّ أَوَّل شَيْء خَلَقَهُ اللَّه الْقَلَم ثُمَّ خَلَقَ النُّون وَهِيَ الدَّوَاة ثُمَّ قَالَ لَهُ اُكْتُبْ قَالَ وَمَا أَكْتُب ؟ قَالَ اُكْتُبْ مَا يَكُون - أَوْ - مَا هُوَ كَانَ مِنْ عَمَل أَوْ رِزْق أَوْ أَثَر أَوْ أَجَل فَكَتَبَ ذَلِكَ إِلَى يَوْم الْقِيَامَة فَذَلِكَ قَوْله " ن وَالْقَلَم وَمَا يَسْطُرُونَ "(تفسير ابن كثير

عَنْ أَبِي هُرَيْرَة سَمِعْت رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُول " إِنَّ أَوَّل شَيْء خَلَقَهُ اللَّه الْقَلَم ثُمَّ خَلَقَ النُّون وَهِيَ الدَّوَاة ثُمَّ قَالَ لَهُ اُكْتُبْ قَالَ وَمَا أَكْتُب ؟ قَالَ اُكْتُبْ مَا يَكُون - أَوْ - مَا هُوَ كَانَ مِنْ عَمَل أَوْ رِزْق أَوْ أَثَر أَوْ أَجَل فَكَتَبَ ذَلِكَ إِلَى يَوْم الْقِيَامَة فَذَلِكَ قَوْله " ن وَالْقَلَم وَمَا يَسْطُرُونَ " ثُمَّ خَتَمَ عَلَى الْقَلَم فَلَمْ يَتَكَلَّم إِلَى يَوْم الْقِيَامَة (تفسير ابن كثير

இறைவனால் படைக்கப்பட்ட பொருள்களிலேயே எழுதுகோல்தான் முதலாவது படைப்பு என்று நபிமொழி ஒன்று கூறுகின்றது. 

ஹழ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்: அல்லாஹ் முதன் முதலாகப் படைத்தது எழுதுகோலைத்தான். பிறகு அல்லாஹ் நூனைப் படைத்தான். நூன் என்பது மையைக் குறிக்கும். இதனைத் தான் அல்லாஹ் சூரத்துல் கலமில் “நூனின் மீது சத்தியமாக - அதாவது மையின் மீது ஆணையாக! என்று கூறுகிறான். பிறகு (எழுதுகோலை நோக்கி) “எழுது” என்பதாக ஆணையிட்டான். “எதை நான் எழுதுவது?” என்று எழுதுகோல் கேட்டது. 

   அல்லாஹ் “இதுவரை உண்டாகியுள்ள மற்றும் நிகழ்ந்துள்ள, இனி மறுமைநாள் வரை உண்டாகவிருக்கின்ற, நிகழவிருக்கின்ற செயல்பாடுகள், தவணைகள், வாழ்வாதாரங்கள் அனைத்தையும் எழுது“ என்று கட்டளையிட்டான். (மற்றோர் அறிவிப்பின்படி விதிகள் அனைத்தையும் எழுது என்று கட்டளையிட்டான்.) அதுவும் எழுதிக் கொண்டே செல்ல ஒரு கட்டத்தில் அல்லாஹ் எழுதுவதை நிறுத்தச் சொல்லிக் கட்டளையிட்டு விட்டான். பிறகு எழுதுகோலைக்கொண்டு மனிதனுக்கு எழுதக் கற்றுக்கொடுத்தான்.இதைத் தான் சூரத்துல்அலக்கில் அல்லாஹ், “எழுதுகோலைக்கொண்டு கற்பித்தானே அத்தகைய உமது இறைவன் கண்ணியத்திற்குரியவன்” என்று குறிப்பிடுகின்றான். அந்த எழுது கோலைக் கொண்டுதான் மனிதனுக்கு எழுதவும் கற்றுக்கொடுத்தான். மனித வாழ்வுக்குத் தேவையானவற்றையும் மனிதனுக்குக் கற்றுக் கொடுத்தான். (முஸ்னத் அஹ்மதிலும் இன்னும் பல்வேறு ஹதீஸ் தொகுப்புகளிலும் பதிவாகியுள்ள ஒரு ஹதீஸின் சுருக்கமான கருத்து) கல்வி கற்பதற்கான ஆதார அடிப்படையாக ஓதுவதை, வாசிப்பதை அல்லாஹ் சூரத்துல் அலக்கில் குறிப்பிடுவதைப் போலவே சூரத்துல் கலமில் “மையின்” மீதும் எழுதுகோலின் மீதும் சத்தியமிட்டு எழுது கோலின் சிறப்பை நமக்கு உணர்த்துகின்றான்.

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ (9)

  சங்கைமிகு திருக்குர்ஆன் எழுத்துவடிவில் பாதுகாக்கப்பட்டிருப்பதால் தான் ஹாஃபிழ் அல்லாதவர்கள் திருக்குர்ஆனை ஓதுவதும் திருக்குர்ஆனுக்கு “குதுபுத் தப்சீர்” என்னும் விரிவுரை நூல்களை எழுதுவதும் அதை மொழிமாற்றம் செய்வதும் அவற்றின் மூலம் தெளிவுரை வழங்குவதும் இன்று சாத்தியமாகியுள்ளன. எழுத்துக்கலை என்று ஒன்று இருப்பதால்தான் இப்போதும் இவையெல்லாம் நமக்குச் சாத்தியமாகின்றன. நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தும் ஹதீஸ் என்னும் நபிமொழிக் கலையும் இன்றளவும் கூடப் பாதுகாக்கப்பட்டிருப்பதும் இந்த எழுத்துக் கலையின், எழுதுகோலின் வாயிலாகத்தான்.

திருக்குர்ஆன் அழிந்து விடாமல் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு இன்றும் நேர்வழிக்கான மூல ஊற்றாகத் தொடர்ந்து விளங்கி வருகின்றது என்றால் அதற்கு எழுதுகோல் ஆற்றிவரும் பங்கு மகத்தானது. திருக்குர்ஆன் இறங்கிய இருபத்துமூன்று வருட காலத்தில் பல்வேறு கட்டங்களில் நபி(ஸல்) அவர்கள் நாற்பதுக்கும் மேற்பட்ட எழுத்தர்களை நியமித்து தோல்களிலும் எலும்புகளிலும் அன்றைய காலத்தில் எழுதப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்திலும் இறைவசனங்களைப் பதிவுசெய்து பாதுகாத்து வைத்தார்கள். 

முதன்முதலில் எழுதுகோலைப் பயன்படுத்தும் முறையை கண்டுபிடித்த இத்ரீஸ் (அலை)

  முதன்முதலில் எழுதுகோலைப் பயன்படுத்தும் முறையை கண்டுபிடித்தது இத்ரீஸ் (அலை) அவர்கள் தான். மேலும் உலகத்திலேயே அற்புதமான கைத்தொழிலான தையலை கண்டுபிடித்தவர்களும் இவர்கள் தான். அழகிய முறையில் ஆடையை உடுத்தும் முறையை இவர்கள்தான் கற்றுத் தந்தார்கள். போர்களில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களையும் இவர்கள்தான் முதலில் கொண்டு வந்தார்கள். அதுமட்டுமின்றி அல்லாஹ்வின் பாதையில் முதலில் போர் செய்தவர்களும் இவர்கள் தான். இதுபோன்று பல நபிமார்கள் நிறைய கண்டுபிடித்துள்ளார்கள். அதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.

عن عبادة بن الصامت ـ رضي الله عنه: أن رسول صلى الله عليه وسلم قال: إن أول ما خلق الله القلم. قال له: اكتب، فقال: يا رب وما أكتب؟ قال: اكتب مقادير كل شيء حتى تقوم الساعة  : رواه الترمذي ، و الطبراني، و أبو داوود ، ومسند احمد .

     உபாதத் பின் ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக அல்லாஹ் முதன் முதலில் படைத்தது பேனாவை தான். அந்தப் பேனாவிடம், "நீ எழுது!" எனக் கூறினான். அந்தப் பேனா, "என்னைப் படைத்தாள்பவனே! நான் எதை எழுதுவது?" என கேட்டது. அதற்கு அல்லாஹ் கூறினான்; "மறுமை நாள் ஏற்படுகிற வரை உள்ள அனைத்து வஸ்துக்களின் கதுர் - தலையெழுத்தையும் நீ எழுது! (பின்னர் அது எழுதி முடித்தது. ) 

நூல் : திர்மிதீ, அபூதாவூத், முஸ்னது அஹமத், தப்ரானீ.

வாசிக்கும் பழக்கம்

    சிறந்து விளங்கிய விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள், தலைவர்கள் போன்ற அனைவரும் நல்ல நூல்களை வாசித்ததால் தான் நம்மை திரும்பிப் பார்க்கவும்  அவர்களைப் பற்றி யோசிக்கவும் வைத்திருக்கிறார்கள்.அண்ணல் அம்பேத்கர் அவர்கள் காலையில் நூலகம் திறந்ததும் முதல் ஆளாக உள்ளே செல்வார்.நூலக நேரம் முடிந்தது கூட தெரியாமல் தன் வாசிப்பில் மெய்மறந்து வாசித்துக் கொண்டிருப்பார். இவ்வளவு வாசித்த ஒருவரால் தான் சிறந்த அரசியலமைப்புச் சாசனத்தை வழங்க முடிந்தது.

 பத்ரு யுத்தம் முடிவுற்ற பிறகு நபி (ஸல்) அவர்கள், "பிணைத்தொகை வழங்க முடியாத ஒவ்வொருவரும் 10 முஸ்லிம்களுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக் கொடுத்துவிட்டு செல்லலாம்" என அறிவுறுத்தினார்கள். 

   அன்றைய தினத்தில் கல்வித் தேவையை விட நபி (ஸல்) அவர்களுக்கும், இஸ்லாமிய அரசாங்கத்திற்கும் பணத் தேவையும், குரைஷியருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அந்தக் கைதிகளை தம் வசம் வைத்திருப்பதுமே அவசியத் தேவையாக இருந்தது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் இந்த இரண்டு தேவையை விட, கல்வித் தேவை தான் அத்தியாவசியமானது என்பதை உணர்ந்து அதையே தேர்ந்தெடுத்தார்கள்.

 ஜைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் சிரியாக் மற்றும் ஹிப்ரு மொழிகளை தம் 13 ஆம் வயதிலேயே கற்றுக்கொண்டார்கள், நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் கடிதங்கள் எழுதுவதாக இருந்தால் இவர்களை அழைத்து தான் எழுதச் சொல்லுவார்கள். அதைப்போல் நபிகளாருக்கு வரும் கடிதங்களை வாசிப்பதற்கும்  இவர்களே நியமிக்கப்பட்டு இருந்தார்கள். அதனால் நபி (ஸல்)அவர்களோடு நெருங்கிப்பழகும் வாய்ப்பு அவர்களுக்கு உண்டானது. நபிகளாரோடு நெருங்குவதற்கு காரணம் வாசிக்கத் தெரிந்ததுதான்!

    உலகில் முதல்முறையாக கல்விப் புரட்சியை ஏற்படுத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் இன்று உலக அளவில் படித்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகக் காணப்படுகிறது. 

 ஈரோடு தமிழன்பன் கூறுவார். பத்து பறவைகளோடு பழகி பாருங்கள்; நீங்கள் ஒரு பறவையாகி விட முடியாது. பத்து நதிகளோடு பழகிப் பாருங்கள்; நீங்கள் ஒரு நதியாகி விட முடியாது. பத்து புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்; நீங்கள் பதினோறாவது புத்தகம் ஆவீர்கள்! 

வாசி - படி - ஓது :

    நம்மில் பெரும்பான்மையானவர்கள் வாசி - படி -  ஓது என்ற மூன்று சொற்களையும் ஒரே அர்த்தத்துடன் பார்க்கிறார்கள். ஆனால் இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பொருள் உடையவைகளாகும்.

  வாசி:- கண்களால் பார்த்து, நாவினால் மொழிந்து சொற்களின் அர்த்தத்தை உணர்தல்.

  படி:- கண்களால் பார்த்து, நாவினால் மொழிந்து, சொற்களின்  பொருளை விளங்கி மனதால் கிரகித்தல்.

  ஓது:- கண்களால் பார்த்து, நாவினால் மொழிந்து, சொற்களின் அர்த்தத்தை விளங்கி, மனதால் கிரகித்து செயலாக  உருவமைப்பது, அல்லது நடைமுறைப்படுத்துவது.

சிந்து நதியில் சிக்கிய நூல்கள் :

    ஈரான் நாட்டிலிருந்து நம் நாட்டிற்கு வந்த குலிஸ்தான், போஸ்தான் போன்ற தத்துவ நூல்களை எழுதிய அல்லாமா ஸஅதீ சிராஜி (ரஹ் ) அவர்கள் நமது நாட்டிற்கு வந்தது போலவே உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்திருக்கிறார்கள்.

ஆங்காங்கே கிடைக்கும் அனுபவங்களையும், அந்தந்த ஊர்களில் உள்ள உயர்ந்த தத்துவங்களையும், மத கோட்பாடு சார்ந்த ஞான விஷயங்களையும் அறிந்து கொண்டு அவற்றை இஸ்லாமிய மரபுகளோடு இணைத்து, அவற்றை ஒரு கதையாக  உருவகப் படுத்தி  சொன்ன கருத்துக்கள் இன்றும் உலக அளவில் பேசப்படுகிறது. உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டும் காணப்படுகிறது.‌   அல்லாமா ஸஅதீ சிராஜி (ரஹ்) அவர்கள் இந்தியாவின் சிந்து சமவெளிப் பகுதியில் வருடக் கணக்கில் தங்கியிருந்தார்கள். அங்கிருந்த பல்வேறு சமூக மக்களிடம் அவர்களின் மொழியில் உறவாடி, அவர்களிடம் இருந்து ஞானங்களையும் ஞான கருத்துக்கள்  நிறைந்த நூல்களையும் சேகரித்துக் கொண்டு  தாயகம் திரும்பினார்கள்.  அவரின் இந்திய சீடர்கள் பலர் வழியனுப்பச் சென்றனர். படகு சிந்து நதியின் நடுவில் சென்று கொண்டிருந்தது. அப்போது புயல் வீசியது. படகு கவிழ்ந்து விடுமோ என்று அனைவரும் அஞ்சினர். அல்லாமா ஸஅதீ சிராஜி (ரஹ் ) அவர்கள் தாம் கற்றவையும், கொண்டு செல்லும் நூல்களும் பயனற்றதாகி விடுமோ என்று முகம் வாடினார்கள். அதனைக் கண்ட சீடர்கள் பாரம் குறைந்தால் படகு பாதுகாப்பாகச் செல்லக்கூடும் என நினைத்து அறிவுச்செல்வத்தை விட தம்முயிர் பெரிதல்ல எனவும் நினைத்து, "ஷைஹு அவர்களே! எங்களை நாங்கள் காப்பாற்றிக் கொள்கிறோம்; நாங்கள் எப்படியும் மறு கரைக்கு சென்று விடுவோம்; எங்களை விட உங்களையும் உங்களோடு இருக்கும் நூல்களையும் பாதுகாப்பது தான் எங்களின் கடமை" என சொல்லிவிட்டு அனைவரும் ஆற்றில் குதித்தனர். அல்லாமா ஸஅதீ சிராஜி (ரஹ்) அவர்கள் தம்முடைய ஞான நூல்களோடு இந்திய சீடர்களின் தியாக உணர்வுகளையும் சுமந்து கொண்டு கரைசேர்ந்தார்கள். 

  ஒவ்வொரு பள்ளிவாசலிலும் காலை, மாலை மக்தப் மதரஸா நடைபெற்று வருகிறது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை சில மணி நேரங்களை ஒதுக்கி அவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்க வேண்டும். வாசிப்பை நேசிக்கும் விதமான நூல்களை கொடுத்து வாசிக்கச் செய்ய வேண்டும்.தாய் மொழியில் சத்தமாக வாசிப்பதால் குழந்தைகளுக்குப் படிக்க வேண்டும் என்கிற உணர்வை அது  அதிகப்படுத்துகிறது என Hardward பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வு அறிக்கை கூறுகிறது.

எழுத்துக்கும் வாசிப்புக்கும் இவ்வளவு முக்கியத்துவம் இருக்கும் நிலையில் இன்று நம் சமூக மக்களின் நிலை

இந்தியாவைப் பொறுத்தவரை எவரொருவர் தனது பெயரை எழுதவும், கையெழுத்திடவும் தெரிந்திருக்கிறாரோ அவரும் கல்வியறிவு பெற்றவர் என வகைப்படுத்தப்படுகிறார். இந்த குறைந்த பட்ச கல்வியறிவைக்கூட இந்தியாவில் உள்ள மொத்த முஸ்லிம்களில்  55% அளவினர்தான் பெற்றுள்ளனர். அதிலும் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நிலைமை படு மோசமானதாக இருக்கிறது


2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சச்சார் குழு அறிக்கையில் முஸ்லிம்களின் கல்வி பொருளாளதார நிலை தெளிவாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் 41% படிப்பறிவில்லாதவர்கள். 8ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 15%,-  +2 வரை படித்தவர்கள் 7.8%,    டிப்ளோமா வரை படித்தவர்கள்4.4%, --பட்டப்படிப்பு படித்தவர்கள் 1.7% பேர் மட்டுமே,- 38.4% பேர் வறுமையில் வாழ்கின்றனர், கிராமபுற முஸ்லிம்களில் 62% பேர் அடிப்படை வசதியில்லாத வீடுகளில் வாழ்கின்றனர், பாதுகாப்பு துறையில் 4% பேர் முஸ்லிம்கள். தமிழக உள்துறையில் உயர்பதவிகளில் 0% ஒருவர் கூட முஸ்லிம்கள் இல்லை (2006 கணக்கு படி), கீழ்மட்ட பதவியில் 2.6% பேர் உள்ளனர்.



.

இருபத்தி நான்காவது தராவீஹ்

 بسم الله الرحمن الرحيم  

 24- வது தராவீஹ் 





பிறர் நலம் பேணுவது

وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (9) الحشر

விளக்கம் – மக்காவில் சொத்து சுகங்கள் அனைத்தையும் தியாகம் செய்து விட்டு வந்த முஹாஜிர்களுக்காக தன் வீட்டின் பாதியையும் ஒதுக்கிக் கொடுத்து மற்றும் பல்வேறு வகையில் உதவியாக இருந்த அன்சாரிகளைக் குறித்து இந்த வசனம் பேசுகிறது

பிறர் நலம்  பேணுவது ஹஜ்ஜின் நன்மையை பெற்றுத் தரும்

عَنْ عَبْدِ اللَّهِ بن عُمَرَ قَالا : مَنْ مَشَى فِي حَاجَةِ أَخِيهِ الْمُسْلِمِ أَظَلَّهُ اللَّهُ تَعَالَى بِخَمْسَةٍ وَسَبْعِينَ أَلْفَ مَلَكٍ يَدْعُونَ لَهُ ، وَلَمْ يَزَلْ يَخُوضُ فِي الرَّحْمَةِ حَتَّى يَفْرُغَ ، فَإِذَا فَرَغَ كَتَبَ اللَّهُ لَهُ حَجَّةً وَعُمْرَةً ، وَمَنْ عَادَ مَرِيضًا أَظَلَّهُ اللَّهُ بِخَمْسَةٍ وَسَبْعِينَ أَلْفَ مَلَكٍ ، لا يَرْفَعُ قَدَمًا إِلا كُتِبَتْ لَهُ حَسَنَةٌ ، وَلا يَضَعُ قَدَمًا إِلا حُطَّتْ عَنْهُ سَيِّئَةٌ ، وَرُفِعَ بِهَا دَرَجَةً حَتَّى يَقْعُدَ فِي مَقْعَدِهِ ، فَإِذَا قَعَدَ غَمَرَتْهُ الرَّحْمَةُ ، فَلا يَزَالُ كَذَلِكَ إِذَا أَقْبَلَ حَتَّى يَنْتَهِيَ إِلَى مَنْزِلِهِ . لا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنِ ابْنِ عُمَرَ إِلا بِهَذَا الإِسْنَادِ رواه الطبراني في المعجم الكبير

  யார் முஸ்லிமான தன்னுடைய சகோதரரின் தேவையை நிறைவேற்றி வைப்பதற்காகச் செல்கிறாரோ அவருக்காக 75 ஆயிரம் மலக்குகள் தம் இறக்கைகளை விரித்த படி துஆ செய்கிறார்கள். அவரது தேவையையும் நிறைவேற்றி வைத்து விட்டால் அவருக்கு ஒரு ஹஜ் மற்றும் உம்ராவின் நன்மை கிடைக்கும். அவர் திரும்பி வரும் வரை அல்லாஹ்வின் ரஹ்மத்தில் மூழ்கியவராக இருப்பார். யார் முஸ்லிமான நோய்வாய்ப்பட்ட தனது சகோதரரை நலம் விசாரிப்பதற்காகச் செல்கிறாரோ அவருக்காக 75 ஆயிரம் மலக்குகள் தம் இறக்கைகளை விரித்த படி துஆ செய்கிறார்கள். அவர் அந்த நோயாளியிடம் அமரும் வரை இச்சிறப்பு இருக்கும். அவர் அந்த நோயாளியிடம் சென்று நலம் விசாரிக்க அமர்ந்து விட்டால் அல்லாஹ்வின் ரஹ்மத் அவரைச் சூழ்ந்து கொள்ளும். அவர் அங்கிருந்து திரும்பி தன் வீட்டுக்கு வரும் வரை அவரது ஒவ்வொரு எட்டுக்கும் நன்மை எழுதப்பட்டு, பாவம் மன்னிக்கப்பட்டு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது.          

عن علي بن حسين ، قال : خرج الحسن يطوف بالكعبة ، فقام إليه رجل فقال : يا أبا محمد ، اذهب معي في حاجة إلى فلان ، فترك الطواف وذهب معه ، فلما ذهب قام إليه رجل حاسد للرجل الذي ذهب معه ، فقال : يا أبا محمد ، تركْتَ الطواف وذهبتَ معه ؟ قال : فقال له الحسن : وكيف لا أذهب معه ؟ ورسول الله صلى الله عليه وسلم قال :  من ذهب في حاجة لأخيه المسلم فقضيت حاجته كتبت له حجة وعمرة ، وإن لم يقض كتبت له عمرة فقد اكتسبت حجة وعمرة ورجعت إلى طوافي (بيهقي في شعب الايمان

 ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு தவாஃப் செய்து கொண்டிருக்கும் போது ஒரு நண்பர் வந்து அபூ முஹம்மத் அவர்களே வாருங்கள். நாம் இருவரும் இணைந்து ஒரு மனிதரின் முக்கியமான அவசியத்தேவையை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்று கூறியவுடன் ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உடனே தவாஃபை விட்டு விட்டு அவருடன் சென்று விட்டார்கள்.அப்போது அந்த நண்பருக்கு வேண்டாத மற்றொருவர் இதைக் கவனித்து விட்டு ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து அவர் அழைத்தவுடன் நீங்கள் தவாஃபை பாதியில் விட்டு விட்டுச் சென்று விட்டீர்களே இது நியாயமா என்று பொறாமையுடன் கூறினார். அப்போது ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நான் எப்படி அவருடன் செல்லாமல் இருக்க முடியும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். யார் முஸ்லிமான தனது சகோதரரின் தேவையை நிறைவேற்றி வைப்பதற்காகச் சென்று அவரது நிறைவேற்றியும் வைத்து விட்டால் அவருக்கு ஒரு ஹஜ் மற்றும் உம்ராவின் நன்மை கிடைக்கும். அதே நேரத்தில் அவரது தேவையை நிறைவேற்றி வைப்பதற்காக இவர் புறப்பட்டுச் சென்றும் அதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைக்கா விட்டால் புறப்பட்டுச் சென்றதற்காக ஒரு உம்ராவின் நற்கூலி வழங்கப்படுகிறது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்கும்போது நான் எப்படி அவருடன் செல்லாமல் இருக்க முடியும். இப்போது நான் ஹஜ், உம்ராவின் நன்மையையும் அடைந்து கொண்டேன். என்னுடைய தவாஃபை விட்டதில் இருந்து திரும்ப ஆரம்பித்து அதன் நன்மையையும் பெற்றுக் கொண்டேன் என்று பதில் கூறினார்கள்.                              

عَن أَنَس بن مالك : أن رسول الله صلى الله عليه وسلم قال : من أغاث ملهوفا كتب الله له ثلاثا وسبعين مغفرة مغفرة واحدة منها فيها صلاح لأمره كله وثنتان وسبعون إلى يوم القيامة ، أو ذخرها له يوم القيامة. (مسند البزار

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

யார் பாதிக்கப் பட்டவருக்கு உதவுவாரோ அல்லாஹ் அவருக்கு 73 மஃபிரத்துகளை வழங்குகிறான். அவற்றில் ஒரு மஃபிரத் மட்டுமே அவருடைய இம்மையின் ஈடேற்றத்திற்குப் போதுமாகும். மூதமுள்ள 72 மஃபிரத் அவருடைய மறுமையின் நலனுக்காக சேமித்து வைக்கப்படும். 

عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ....مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِه (مسلم

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

எவர் தன் உடன் பிறவா சகோதரரின் தேவையை நிறைவேற்றுவதில் ஈடுபட்டிருப்பாரோ அவருடைய தேவையை நிறைவேற்றுவதில் அல்லாஹ் ஈடுபட்டிருப்பான்.                                                                    

عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى (مسلم


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதில் உண்மை முஃமின்களுக்கு உதாரணம் ஒரே உடலைப் போன்றாகும். உடலின் ஒருபகுதிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் மற்ற பகுதிகளும் அதில் ஒத்துழைக்கின்றன. விழித்திருப்பது, காய்ச்சல் போன்றவைகள் மூலம் மற்ற உறுப்புக்கள் சிரமத்தில் பங்கெடுத்துக் கொள்கின்றன.                                         

பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவுவது இன்னும் சிறந்தது

  விளக்கம்- நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் எகிப்தின் அரசராக இருந்து திறமையாக செயல்பட்டு செழிப்பான முதல் ஏழு வருடங்களில் முடிந்த வரை  சேமித்து வைத்து அரசாங்கத்தின் பைத்துல் மாலில் பத்திரப் படுத்தினார்கள். அதற்கடுத்த பஞ்சமான ஏழு வருடங்கள் வந்த போது சேமித்து வைத்த அந்த தானியங்களை நாட்டு மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவியாக வழங்கினார்கள். அந்தப் பணிகளில் முழுமையாக அவர்கள் ஈடு பட்டதால் தான் குடும்பம் ஒன்று சேர்ந்த பிறகு  தந்தையைச் சந்திப்பதற்கும் கூட அவர்கள் வர முடியவில்லை.                              

 குடும்பமா பொதுச் சேவையா என்று வரும்போது தனது குடும்பத்தை விட பொதுச் சேவையை நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் தேர்ந்தெடுத்துக்  கொண்டார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. மேலும் சிரமத்தில் இருப்பவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி முஸ்லிமாக இல்லா விட்டாலும் சரி சாதி, மதம் பாகுபாடு பார்க்காமல் உதவுவது நமது கடமையாகும். 

வாழ்க்கையில் நாம் பிறருக்குச் செய்யும் உதவி, உபகாரம், ஒத்துழைப்பு ஆகியவற்றை இரண்டு விதமாக பிரிக்கலாம். சில உதவிகளை நாம் செய்ய வேண்டும் என்று நாடி அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகளை நாம் தேடிச் செல்வோம். சில நேரங்களில் நாம் சாதாரணமாக இருக்கும்போது  பிறருக்கு உதவி செய்யும் சூழ்நிலைகளை தானாக அமையும். அவைகளை நாம் தட்டிக் கழிக்கக் கூடாது அவைகளை சந்தர்ப்பமாக கருதி அந்த உதவிகளைச் செய்ய வேண்டும். உதாரணமாக டிக்கெட் முன்பதிவு செய்யுமிடத்தில் ஒருவர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யத் தெரியாமல் தடுமாறுகிறார் அவருக்கு அதை பூர்த்தி செய்து தருவது. ஒருவர் பேனாவை மறந்து வைத்து விட்டு வந்து நம்மிடம் பேனாவைக் கேட்பார். அவருக்கு சிறிது நேரம் பேனா கொடுத்து உதவுவது (மேலும் வண்டியில் இருந்து இறங்க சிரமப் படுபவரை இறக்கி விடுவது. பைக்கில் போகும்போது ஏதாவது ஒரு பொருளைத் தவற விட்டுச் செல்பவருக்கு அதை எடுத்துக் கொடுப்பது இது மாதிரி எதார்த்தமான முறையில் உதவி செய்யும் வாய்ப்புகள் தானாக வந்து அமையும் போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  

சில வகையான சின்னச் சின்ன உதவிகளுக்கு அல்லாஹ் தரும் பெரிய பெரிய நன்மைகள்

عَنْ عَائِشَةَ رضي الله عنها  أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ مَا الشَّيْءُ الَّذِي لَا يَحِلُّ مَنْعُهُ قَالَ الْمَاءُ وَالْمِلْحُ وَالنَّارُ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الْمَاءُ قَدْ عَرَفْنَاهُ فَمَا بَالُ الْمِلْحِ وَالنَّارِ قَالَ يَا حُمَيْرَاءُ مَنْ أَعْطَى نَارًا فَكَأَنَّمَا تَصَدَّقَ بِجَمِيعِ مَا أَنْضَجَتْ تِلْكَ النَّارُ وَمَنْ أَعْطَى مِلْحًا فَكَأَنَّمَا تَصَدَّقَ بِجَمِيعِ مَا طَيَّبَ ذَلِكَ الْمِلْحُ وَمَنْ سَقَى مُسْلِمًا شَرْبَةً مِنْ مَاءٍ حَيْثُ يُوجَدُ الْمَاءُ فَكَأَنَّمَا أَعْتَقَ رَقَبَةً وَمَنْ سَقَى مُسْلِمًا شَرْبَةً مِنْ مَاءٍ حَيْثُ لَا يُوجَدُ الْمَاءُ فَكَأَنَّمَا أَحْيَاهَا (ابن ماجة)ضعيف- بَاب الْمُسْلِمُونَ شُرَكَاءُ فِي ثَلَاثٍ – كِتَاب الْأَحْكَامِ

அன்னை ஆயிஷா ரழி அவர்கள் கூறுவதாவது நான் நபி ஸல் அவர்களிடம் கேட்டேன். நம்மிடமுள்ள சில அற்பமான (விலை மலிவான) பொருட்களில் சிலவற்றை யாரேனும் தாம் சிறிது பயன்படுத்திக் கொள்ள கேட்கும்போது எந்தெந்தப் பொருட்களை நாம் தராமல் மறுக்கக் கூடாது என்று ஏதேனும்  சட்டம் உள்ளதா என்று கேட்டேன் அதற்கு நபி ஸல் அவர்கள் தண்ணீர், உப்பு, நெருப்பு என பதிலளித்தார்கள். உடனே நான் தண்ணீர் தர மறுக்கக்கூடாது என்பது எனக்கும் புரிகிறது. பிறரை தாகத்தோடு விட்டு விடுவது தவறு. ஆனால் நெருப்பையும், உப்பையும் பிறருக்குத் தருவதற்கு ஏன் மறுக்கக்கூடாது என்ற காரணம் எனக்குப் புரியவில்லையே என்றேன் அதற்கு நபி ஸல் அவர்கள் பற்ற வைப்பதற்காக ஒரு நெருப்புக் கங்கை ஒருவர் தந்தால் அந்த நெருப்பின் மூலம் என்னென்ன சமைக்கப்படுகிறதோ அவைகள் அனைத்தையும் தானமாக தந்தவரைப் போலாவார். அதேபோல அதேபோல் உப்பை ஒருவர் சிறிதளவு தானமாக கொடுத்தாலும் அந்த உப்பு எந்த உணவுக்கெல்லாம் சுவையைக் கூட்டியதோ அவைகள் அனைத்தையும் தானமாக தந்தவரைப் போலாவார். எவர் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நேரத்தில் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடறு தண்ணீர் தருவாரோ அவர் ஒரு அடிமையை உரிமையை விட்டவரைப் போலாவார். எவர் தண்ணீர் தட்டுப்பாடுள்ள  நேரத்தில் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடறு தண்ணீர் தருவாரோ அவர் அந்த முஸ்லிமுக்கு உயிர் கொடுத்தவரைப் போலாவார்.

Saturday, March 22, 2025

இருபத்தி மூன்றாவது தராவீஹ்

 بسم الله الرحمن الرحيم  

 23- வது தராவீஹ் 





இரும்பைப் பற்றி அல்- குர்ஆன்

وَأَنْزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ (25) الحديد

இரும்பை நாமே வானில் இருந்து இறக்கி வைத்தோம். அதில் உறுதித் தன்மை இருக்கிறது. மக்களுக்கு நிறைய பயன்பாடுகள் உள்ளன

ஒரு கட்டிடம் கட்டுவதாக இருந்தாலும் வாகனம் தயாரிப்பதாக இருந்தாலும் இன்னும் பல்வேறு விதமான விஷயங்களுக்கு இரும்பின் பயன்பாடுகள் மிகவும் அதிகமாக உள்ளது. பூமிக்குள் இருந்து நமக்குக் கிடைக்கும் தங்கம் வெள்ளி போன்ற தாதுப் பொருட்களில் இரும்பு தான் அதிகம்.  எங்கெல்லாம் பாலங்கள் கட்டப் படுகிறதோ அங்கெல்லாம் இரும்பு இல்லாமல் அவற்றை உருவாக்குவது சாத்தியம் இல்லை. இரும்பு உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிக இரும்புத் தாதுவை உற்பத்தி செய்யும் மாநிலமாக ஒடிசா மாநிலம் விளங்குகிறது     

இரும்பு வானில் இருந்து இறங்கியதாக அல்லாஹ் கூறுவதன் விளக்கம்

தங்கம் எப்படி மண்ணுக்கு அடியில் இருந்து பெறப்படுகிறதோ அதேபோல மண்ணுக்கு அடியில் இருந்து பெறப்படும் உலோகம் தான் இரும்பு. ஆனால் அல்லாஹ் குர்ஆனில் கூறும்போது இரும்பை நாம் இறக்கி வைத்தோம் என்று கூறுகிறான். இதில் எது உண்மை. நிச்சயமாக குர்ஆனின் கூற்று ஒருபோதும் பொய்யாகி விடாது. அப்படியானால் இதற்கு அறிஞர்களின் விளக்கம் என்னவெனில் உலகில் மனிதன் படைக்கப்படும் முன்பே இந்த பூமி இருந்தது. மழை எப்படி இப்போது பூமியில் அவ்வப்போது பெய்யுமோ அதுபோன்று இரும்புத் துகள்களை அல்லாஹ் வானில் இருந்து இறக்கிக் கொண்டிருந்தான் மனிதனை அல்லாஹ் படைத்த பின்புதான் ஓசோன் என்ற பாதுகாப்பு முகடுகளை அல்லாஹ் ஏற்படுத்தி மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்காதவைகளை மட்டுமே அல்லாஹ் இறக்க ஆரம்பித்தான். ஆகவே முற்காலத்தில் நிறையவே அல்லாஹ் இறக்கி வைத்த அந்த இரும்புத் தாதுக்கள் மனிதனின் தேவை அளவுக்கு மண்ணுக்குள் படிந்து கிடக்கின்றன. அதைத் தான் மனிதன் மண்ணுக்குள் இருந்து தோண்டி எடுத்துப் பயன்படுத்துகிறான். இரும்பு பூமியில் உருவாகும் சாத்தியம் இல்லை. வேறு உலகில் இருந்து தான் வந்திருக்க வேண்டும் என்ற நாசா விஞ்ஞானிகளின் கூற்று குர்ஆனை உண்மைப் படுத்துகிறது

இப்பூமியிலுள்ள இரும்பு பூமிக்குள் இருந்து பெறப்பட்டாலும் பூமியில் இருந்து உருவானதல்ல என்பதை விஞ்ஞானிகள் தக்க காரணத்துடன் விளக்கியுள்ளனர். ஒவ்வொரு தாதுக்களும் உருவாவதற்கு அதற்கேற்ற வெப்பம் இருக்க வேண்டும். ஆனால் இரும்பு என்ற தனிமம் உருவாவதற்குத் தேவையான வெப்பம்இந்த பூமியில் எந்தவொரு காலகட்டத்திலும் இருக்கவில்லை. இப்பூமியில் கிடைக்கும் பொருட்கள் இங்கேயே உருவாவதற்கான காரணங்கள் இல்லாவிட்டால் அப்பொருள் வெளி உலகத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. 30 கோடி டிகிரி வெப்பமுடைய பல நட்சத்திரங்கள் பால்வெளியில் உள்ளன. இந்த நட்சத்திரங்களிலிருந்து எரி கற்கள் முற்காலத்தில் நிறைய விழுந்துள்ளன. அவற்றின் துகள்கள் பூமிக்குள் வந்து இறங்குகியுள்ளன. கோடானு கோடி ஆண்டுகளாக இப்படி விழுந்த இரும்புத் துகள்களைத்தான் பூமியிலிருந்து எடுத்துப் பயன்படுத்துகிறோம்.


  இது குறித்து நாசா விஞ்ஞானிகள் மேலும் கூறுகின்றனர். இரும்பின் ஒரு அணுவை உருவாக்குவதற்கு சூரியக் குடும்பத்தின் மொத்த ஆற்றலைப் போல் நான்கு மடங்கு ஆற்றல் தேவைப்படும். எனவே பூமியில் காணப்படும் இரும்பு எங்கிருந்தோ வானத்தில் இருந்து தான் வந்திருக்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இரும்பு இப்பூமியில் உற்பத்தியாக வில்லை, மேலிருந்து தான் இறக்கப்பட்டது என்பதை அற்புதமாக அறிவித்திருப்பதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது நிரூபணமாகின்றது.

மனித உடம்புக்குள் இரும்பு

இரும்பு இல்லாமல் உலகம் இயங்காது என்ற வார்த்தை எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு இரும்பு இல்லாமல் மனித உடலும் இயங்காது என்பது உண்மைமனிதனின் இரத்தத்தில் இரும்பு முக்கியமானது இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்தாகிறது ஆக்சிஜனை உடலெங்கும் உள்ள செல்களுக்கு அனுப்பி உயிர்வாழச் செய்கின்றது மனித உடலில் ஒரு ஆணி தயாரிக்குமளவு இரும்பு உள்ளது

நம் உடம்பில் போதுமான அளவு ஹீமோகுளோபின் உருவாவதற்கு இரும்புச்சத்துள்ள உணவு உட்கொள்ள வேண்டும். பருப்புகள், காய்கறிகள், முழு தானியங்கள், பழங்கள், இறைச்சிகள் உள்ளிட்டவை  இரும்புச்சத்து நிறைந்த உணவுகளாகும். 100 கிராம் பாதாம் பருப்பில் 4.8 மிகி இரும்புச்சத்து உள்ளது, வேர்க்கடலை பாதாம் பிஸ்தா வால்நட் போன்றவைகளும் இரும்புச்சத்தை அதிகப் படுத்துபவையாகும்.             

இரும்பின் வலிமையை உதாரணம் காட்டி தர்மத்தின் வலிமையை உணர்த்திய நபி ஸல்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَمَّا خَلَقَ اللَّهُ الْأَرْضَ جَعَلَتْ تَمِيدُ فَخَلَقَ الْجِبَالَ فَعَادَ بِهَا عَلَيْهَا فَاسْتَقَرَّتْ فَعَجِبَتْ الْمَلَائِكَةُ مِنْ شِدَّةِ الْجِبَالِ قَالُوا يَا رَبِّ هَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الْجِبَالِ قَالَ نَعَمْ الْحَدِيدُ قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الْحَدِيدِ قَالَ نَعَمْ النَّارُ فَقَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ النَّارِ قَالَ نَعَمْ الْمَاءُ قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الْمَاءِ قَالَ نَعَمْ الرِّيحُ قَالُوا يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنْ الرِّيحِ قَالَ نَعَمْ ابْنُ آدَمَ تَصَدَّقَ بِصَدَقَةٍ بِيَمِينِهِ يُخْفِيهَا مِنْ شِمَالِهِ (ترمذي

அல்லாஹ் பூமியைப் படைத்த பொழுது அது அசைந்து நடுங்கியது. உறுதியாக நிலை நிறுத்தி அதன் மேல் அவன் மலைகளை வைத்தான். பிறகு வானவர்கள் இறைவனிடம், “இறைவா! உன் படைப்பில் இந்த மலைகளை விட வலிமையுள்ளது எது?” என்று கேட்டார்கள். அதற்கு மறுமொழியாக, “மலைகளை விட இரும்பு வலிமையுள்ளது. ஏனென்றால் அது அவற்றை உடைக்கிறது” என்றான். பின்னர் வானவர்கள், “இரும்பை விட வலிமையானது எதுவும் உண்டா?” என்று கேட்டார்கள். அதற்கு இறைவன், “ஆம், நெருப்பு இரும்பை விட பலமுள்ளது. ஏனெனில், அது இரும்பை உருக்கி விடுகின்றது” என்றான். மறுபடியும் வானவர்கள், “இறைவா, நெருப்பை விட வன்மை அதிகமுள்ளது வேறு ஏதும் உண்டா?” என்று வினவினார்கள். “ஆம் தண்ணீர் இருக்கிறது. ஏனென்றால், அது நெருப்பை அணைத்து விடுகிறது” என்றான் இறைவன். உடனே வானவர்கள், “தண்ணீரை விட வலைமையானது வேறு ஏதும் இருக்கிறதா?” என்றூ கேட்டார்கள். இறைவனும், “ஆம். காற்று இருக்கிறதே. அது தண்ணீரை வெற்றி கொண்டு அலையாடச் செய்து விடுகிறது” என்றான். அதன் பின்னர் வானவர்கள், “இறைவா, காற்றை விட வலிமையானது எதுவும் உன் படைப்பில் இருக்கின்றதா?” என்று கேட்டனர். கடைசியாக இறைவன், “ஆம், தானம் செய்யும் நல்ல மனிதன். இடது கையால் தானம் செய்து, அதை வலது கையிலிருந்து மறைப்பவன். அவன் எல்லாவற்றையும் வெற்றி கொள்வான்” என்றான்.                            

தாவூத் அலை அவர்களுக்கு இரும்பை மெழுகு போல வளையக் கூடியதாக அல்லாஹ் ஆக்கித் தந்தான்.முதன் முதலில் இரும்பைக்கொண்டு தொழில்செய்தவர்கள் அவர்கள் தான்

(وألنا له الحديد) قال ابن عباس: صار عنده كالشمع. وقال الحسن: كالعجين، فكان يعمله من غير نار.وقال السدي: كان الحديد في يده كالطين المبلول والعجين والشمع، يصرفه كيف شاء، من غير إدخال نار ولا ضرب بمطرقة. وكان يفرغ من الدرع في بعض اليوم أو بعض الليل، ثمنها ألف درهم.  (قرطبي

நாம் இரும்பை வளைப்பதாக இருந்தால் அதற்கான கருவியைக் கொண்டே தவிர வளைக்க முடியாது ஆனால் தாவூத் அலை தன் கைகளாலேயே நினைத்த மாதிரி வளைப்பார்கள். நெருப்பு இல்லாமல் அதை நாம் துண்டாக்க முடியாது. ஆனால் தாவூத் அலை தன் கைகளாலேயே நினைத்த மாதிரி துண்டிப்பார்கள். ஒரே நாளில் ஆயிரம் திர்ஹம் மதிப்புள்ள போர்க் கவச உடைகளைத் தயார் செய்வார்கள்

அல்லாஹ் தாவூத் அலை அவர்களுக்கு இரும்பை வசப்படுத்திக் கொடுத்ததற்கு க் காரணம் 

وسبب ذلك أن داود عليه السلام، لما ملك بني إسرائيل لقي ملكا وداود يظنه إنسانا، وداود متنكر خرج يسأل عن نفسه وسيرته في بني إسرائيل في خفاء، فقال داود لذلك الشخص الذي تمثل له: (ما قولك في هذا الملك داود) ؟ فقال له الملك(نعم العبد لولا خلة فيه) قال داود: (وما هي) ؟ قال: (يرتزق من بيت المال ولو أكل من عمل يده لتمت فضائله).فرجع فدعا الله في أن يعلمه صنعة ويسهلها عليه، فعلمه صنعة لبوس كما قال عزوجل في سورة الانبياء (2)، فألان له الحديد فصنع الدروع، فكان يصنع الدرع فيما بين يومه وليلته يساوي ألف درهم، حتى ادخر منها كثيرا وتوسعت معيشة منزله، ويتصدق على الفقراء والمساكين، وكان ينفق ثلث المال في مصالح المسلمين، وهو أول من اتخذ الدروع وصنعها  (قرطبي

வஹ்ப் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது

நபி தாவூத் அலை அவர்கள் தமது ஆட்சியின் போது தம்மை இனம் காட்டிக் கொள்ளாமல் மாறுவேடத்தில் வெளியே வந்து தம்மைப் பற்றியும் தமது நடத்தை பற்றியும் பயணிகளிடம் விசாரிப்பது வழக்கம் அவ்வாறு அவர்கள் யாரிடம் விசாரித்தாலும் அந்த நபர் நபி தாவூது அலைஹி அவர்களின் வழிபாடு, நடத்தை, நீதி ஆகியவை தொடர்பாக பாராட்டாமல் இருந்ததில்லை.இந்த நிலையில் ஒரு நாள் அல்லாஹ் வானவர் ஒருவரை மனித உருவில் அனுப்பி வைத்தான். அந்த வானவரை தாவூத் அலை அவர்களை சந்தித்தார்கள் மற்றவர்களிடம் விசாரிப்பது போன்ற அவரிடமும் தாவூது (அலை) விசாரித்தார்கள். அதற்கு அவர் தாவூத் அலை அவர்கள் மக்களிலேயே தமக்கும் தம் சமுதாயத்தாருக்கும் நல்லவர்கள் தான். இருந்தாலும் அவரிடம் ஒரே ஒரு பழக்கம் உள்ளது அது மட்டும் அவரிடம் இல்லை என்றால் அவர் முழுமை பெற்றவராகிவிடுவார் என்று பதிலளித்தார்கள். தாவூது அலை அவர்கள் அது என்ன பழக்கம் என்று கேட்டார்கள். அதற்கு அந்த வானவர் தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் ஆன உணவு ஆதாரத்தை முஸ்லிம்களின் நிதியான பொது நிதியிலிருந்தே அவர் பெறுகிறார் என்று பதிலளித்தார்.அப்போது நபி தாவூத் அலை அவர்கள் வல்லமையும் மாண்பும் மிக்க இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபட்டு தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் தன்னிறைவை தரும்படியான கைத்தொழில் ஒன்றை நமக்கு கற்றுத் தருமாறு துஆ கேட்டார்கள். அரசராக மற்றும் நபியாக இருந்தும் தனக்காக வேண்டி ஒரு தொழிலை அல்லாஹ் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தான்.அதனை அடுத்து அல்லாஹ் நபி தாவூது (அலை) அவர்களுக்கு இரும்பை இலகுவாக்கி வைத்தான் கவச ஆடைகள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கற்றுத் தந்தான் அதன்பின் கவச ஆடை தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டார்கள் கவச ஆடைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டவர் இவரே முதலாமவர்.(தஃப்சீர் இப்னு கஸீர்)

தன் கைகளால் உழைத்து உண்ணுவது சிறப்பு என்ற படிப்பினை

في هذه الآية دليل على تعلم أهل الفضل الصنائع، وأن التحرف بها لا ينقص من مناصبهم،

وفي الصحيح عن النبي صلى الله عليه وسلم قال: (إن خير ما أكل المرء من عمل يده وإن نبي الله داود كان يأكل من عمل يده).

தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த   உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது   கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)


عَنْ أَنَسِ أَنَّ رَجُلًا مِنْ الْأَنْصَارِ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ فَقَالَ لَكَ فِي بَيْتِكَ شَيْءٌ قَالَ بَلَى حِلْسٌ نَلْبَسُ بَعْضَهُ وَنَبْسُطُ بَعْضَهُ وَقَدَحٌ نَشْرَبُ فِيهِ الْمَاءَ قَالَ ائْتِنِي بِهِمَا قَالَ فَأَتَاهُ بِهِمَا فَأَخَذَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ ثُمَّ قَالَ مَنْ يَشْتَرِي هَذَيْنِ فَقَالَ رَجُلٌ أَنَا آخُذُهُمَا بِدِرْهَمٍ قَالَ مَنْ يَزِيدُ عَلَى دِرْهَمٍ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا قَالَ رَجُلٌ أَنَا آخُذُهُمَا بِدِرْهَمَيْنِ فَأَعْطَاهُمَا إِيَّاهُ وَأَخَذَ الدِّرْهَمَيْنِ فَأَعْطَاهُمَا الْأَنْصَارِيَّ وَقَالَ اشْتَرِ بِأَحَدِهِمَا طَعَامًا فَانْبِذْهُ إِلَى أَهْلِكَ وَاشْتَرِ بِالْآخَرِ قَدُومًا فَأْتِنِي بِهِ فَفَعَلَ فَأَخَذَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشَدَّ فِيهِ عُودًا بِيَدِهِ وَقَالَ اذْهَبْ فَاحْتَطِبْ وَلَا أَرَاكَ خَمْسَةَ عَشَرَ يَوْمًا فَجَعَلَ يَحْتَطِبُ وَيَبِيعُ فَجَاءَ وَقَدْ أَصَابَ عَشْرَةَ دَرَاهِمَ فَقَالَ اشْتَرِ بِبَعْضِهَا طَعَامًا وَبِبَعْضِهَا ثَوْبًا ثُمَّ قَالَ هَذَا خَيْرٌ لَكَ مِنْ أَنْ تَجِيءَ وَالْمَسْأَلَةُ نُكْتَةٌ فِي وَجْهِكَ يَوْمَ الْقِيَامَةِ إِنَّ الْمَسْأَلَةَ لَا تَصْلُحُ إِلَّا لِذِي فَقْرٍ مُدْقِعٍ أَوْ لِذِي غُرْمٍ مُفْظِعٍ أَوْ دَمٍ مُوجِعٍ(ابن ماجة-بَاب بَيْعِ الْمُزَايَدَةِ


நபிகளாரின் சமூகத்தில் அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தன்   தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா? என நபியவர்கள் வினவ,   முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக்   கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக்கொண்டு வருமாறு நபியவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார். அவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக   வாங்குபவர் உண்டா? என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக்   கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார். பின்பு அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு   திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு  திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே   செய்தார். நபியவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை  போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர   வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.

சில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற   பொருட்களையும் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், நீர்   பிறரிடம் தேவையாகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதைவிட தற்போது நீர்  இருக்கும் நிலை எவ்வளவு அழகானது எனப் பாராட்டி னார்கள். உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை – மறுமையில் இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் தெளிவாக   சுட்டிக் காட்டினார்கள்

இருபத்தி இரண்டாவது தராவீஹ்

 بسم الله الرحمن الرحيم  

 யாரையும் தாழ்வாக கருதக் கூடாது

22 வது தராவீஹ்

يأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ عَسَى أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَى أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ (11) حجرات அல்லாஹ் மனிதர்கள் அனைவரையும் ஒரே ஒரு மூலப்பொருளான களிமண்ணிலிருந்து படைத்தான். இதன் மூலம் அனைவரையும் சமமாக ஆக்கினான். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பாகுபாடு காட்ட வில்லை. 

  இஸ்லாத்தில் இனம், நிறம், மொழி, ஜாதி, குலம் போன்ற வேறுபாடுகள் கிடையாது. பிரதமரே வநதாலும் தொழுகைக்கு நின்றால் சாதாரண மனிதனின் கால் படும் இடத்தில் அவரது தலை இருக்கும். இது தான் இஸ்லாத்தின்  நிலை.

மக்காவின் வெற்றியின் போது ஒருவரை ஒருவர் தாழ்வாக கருதுவதை நபி (ஸல்)  அவர்கள் உடைத்து எறிந்தார்கள். கஃபா புனித இல்லமாக கருதப்படுகிறது. அதன் முகட்டுக்கு உயர்குலத்தைச் சேர்ந்தவர்கள் தான் ஏறிச் செல்ல அனுமதி உண்டு, தாழ்ந்தவர்களாக அவர்கள் யாரைக் கருதுகிறார்களோ அவர்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் அபூபக்கர் (ரழி)  உமர் (ரழி), அலி (ரழி)  போன்ற பெரும் பெரும் ஸஹாபாக்கள் இருக்க நபி (ஸல்) அவர்கள் கறுப்பு நிற நீக்ரோ அடிமையான பிலால் (ரழி) அவர்களை கஃபாவின் முகட்டில் ஏறி நின்று பாங்கு செல்லச் சொன்னார்கள். இந்நிகழ்வு அரபிய வரலாற்றிலேயே திகைப்பூட்டும் சம்பவமாகும். அங்கு இஸ்லாமிய ஆட்சி மட்டும் இல்லையென்றால் பிலால் (ரழி)  அவர்களை அந்த மக்கள் கொலை செய்திருப்பார்கள். ஹாரிஸ் என்பவன் கூறினான். முஹம்மதுக்கு (ஸல்)  பாங்கு சொல்ல வைக்க இந்த கருப்புக் காக்காவைத் தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா? என்றெல்லாம பேசினார்கள். 


    சுவாமி விவேகானந்தர் 1863-1902 தம் கடிதத் தொகுப்பிள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். If ever any religious approached to this equlity in any appreciable manner. It is Islam and Islam alione. இஸ்லாம் தான் மனிதர்களிடையே சமத்துவத்தை கணிசமான அளவு நிலை நாட்டியுள்ளது. மதங்களில் இஸ்லாத்தினால் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்ய முடிந்தது. டாக்டர் அம்பேத்கர் கூறுகையில், இறைவன் முன் மனிதர்கள் அனைவரும் சமமே என்ற அடிப்படை சிந்தாந்தத்தை நடைமுறைப் படுத்துவதில் இஸ்லாத்தைப் போன்று வேறெந்த மதமும் சரியாக கடைபிடிக்கவில்லை.

பிற மதங்களில் ஜாதி வேறுபாடு

இந்தியாவில் மேல்ஜாதி, கீழ் ஜாதி எனும் தீண்டாமை ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கீழ்ஜாதியினரை கேவலமாக நடத்தும் உரிமை மேல் ஜாதியினருக்கு நீண்ட காலமாக இருந்தது.

மனுசாஸ்த்ரா

  பிராமணன் வலிமை, துணிவு, வீரம், தூய்மை, அமைதி, ஞானம், நல்லறிவு, கடவுள் நம்பிக்கை போன்றவைகளுக்கு உரித்தாவன் என்றும் சூத்திரன் என்றால் கழிவு அள்ளுவது, பெருக்குவது போற வேலைகள் செய்ய வேண்டும் என்றும் அவரவர் பிறப்புக்குத் தக்க வேலைகளையும் பிரித்துக் கொடுத்துள்ளதாக சீதை சொல்கிறது. திறமைக்கு, நேர்மைக்கு இங்கே எந்த வேலையும் இல்லை, எல்லாம் பிறப்பினால் முடிவு செய்யப் படுகிறது. சூத்திரனின் கடமை, அந்தக் கேடு கெட்ட கடமையைச் செய்யும் போது கூட கடமையைச் செய்ய வேண்டுமே தவிர அதற்குரிய பயனை எதிர் பார்க்கக் கூடாது என்கிறது சீதை.

 இந்த நூலைத்தான் இந்தியாவின் தேசிய நூலாக ஆக்கவேண்டும் என்று பா.ஜ.க துடிக்கிறது. வேதம் ஓதுவதை சூத்திரன் காதால் கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி அவனுடைய காதுகளில் ஊற்ற வேண்டும். அவன் வேதத்தை உச்சரித்தால் அவனது நாக்கை அறுத்துத் துண்டாக்கிட வேண்டும். வேத நாதங்களை அவன் உள்ளதில் தேக்கி வைத்தால் அவனது உடலை கண்ட துண்டமாக ஆக்கிட வேண்டும். (மனுவின் விதி-167-272-ஸ்ரீ)

கீழ் ஜாதியினர் மேல் ஜாதியினரின் வீட்டிற்கு செல்லக் கூடாது. அவர்களின் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது, அவர்கள் குளிக்கும் கிணற்றில் குளிக்கக் கூடாது, அவர்கள் செல்லும் கோயில்களுக்கு செல்லக் கூடாது, அவ்வளவு ஏன் அவர்கள் முன் தலை நிமிர்ந்து கூட நடக்கக் கூடாது. என்றெல்லாம் அவர்களின் சாஸ்திரங்கள் கூறுகின்றன.ஆனால் இஸ்லாம் இதை விட்டும் மாறுபட்ட ஒன்று. 

 وروي لما استقر عمر بن العاص رض في مصر تعدي ابنه علي احد الاقباط من اهالي مصر وضربه فذهب القبطي المضروب الي الخليفة عمر بن الخطاب رضي الله عنه في المدينة واستعاذ به فبعث الخليفة الي عمرو بن العاص رض فاستقدمه وابنه فلما جاء أعطي الخليفة الي القبطي سوطا وامره أن يضرب ابن عمرو فضربه وأراد أن يضرب اباه عمرو فقال عمرو رض انما ابني الذي ضربك؟ فقال له الخليفة "ياعمرو متي استعبدتم الناس)2وقد ولدتهم أمهاتهم أحرارا؟  (دروس التاريخ الاسلامي)

உமர் (ரழி) ஆட்சியில் எகிப்தின் ஆளுநராக இருந்த அம்ருப்னு ஆஸ் (ரழி)  அவர்களின் மகன் எகிப்தைச் சார்ந்த மாற்று மதத்தவரை அடித்து விட்டார் அடிவாங்கியவர் அம்ருப்னுஆஸ் (ரழி)அவர்களிடம் செல்லாமல் நேரடியாக உமர் (ரழி) அவர்களிடம் வந்து புகார் அளித்தார். உடனே உமர் (ரழி)  அவர்கள் அந்த மகனையும் அழைத்து அம்ரு (ரழி)  அவர்களையும் வரச் சொன்னார்கள். வந்தவுடன் உமர் (ரழி)அவர்கள் அடிவாங்கிய எகிப்தியரிடம் சாட்டையைத் தந்து நீ திருப்பி அடி என்று கூறியவுடன் அவர் அடித்தார், பிறகு ஆளுநரைக் காட்டி அவரையும் அடி என்று உமர் (ரழி) அவர்கள் கூறிய போது, ஆளுநரையும் அடிக்க அவர் முனைந்த போது ஆளுநர் என் மகன் தானே உன்னை அடித்தான். நான் உன்னை அடிக்க வில்லையே என்று அவர் கூற அவர் சாட்டையைக் கீழே  போட்டு விட்டார்.  பிறகு உமர்(ரழி) அவர்கள் அந்த மகனை நோக்கி இவர்களை இவர்களின் தாய்மார்கள் சுதந்திரமானவர்களாகப் பெற்றெடுத்திருக்க நீங்கள் எப்படி இவர்களை அடிமை போல் அடிக்கலாம் என எச்சரித்தார்கள். 

இன,நிற வேறுபாடு

ஐரோப்பிய மக்கள் வெள்ளை நிறம் உடையவர்கள் ஆஃப்ரிக்க மக்கள் கறுப்பு நிறம் கொண்டவர்கள். இதன் அடிப்படையில் வெள்ளை நிறமுடைய நாங்கள் தாம் பிறவிலேயே உயர்ந்தவர்கள். கருப்பர்கள் பிறவிலேயே தாழ்ந்தவர்கள் ((Natural slaves) என்று ஐரோப்பியர்கள் கருதினார். கறுப்பர்களை அடிமையாக்கி, அவர்களிடமிருந்து எல்லா விதமான வேலைகளும் வாங்குவது வெள்ளையர்களுக்கான நியாயமான உரிமை என ஐரோப்பியர் கருதினர். அரேபியர்களிடம் இது போன்ற பாகுபாடுகள் இருந்தன. யாரையெல்லாம் அரபியர்கள் இழிவாக கருதினார்களோ அந்த அனைவரின் அந்தஸ்தையும் உயர்த்தியவர்கள் நபி (ஸல்) அவர்கள்தான்.

 ஜைனப் பின்து ஜஹ்ஷ் (ரழி) என்ற தனது மாமி மகளான குரைஷி உயர் குலத்தைச் சேர்ந்த பெண்ணை அபூசீனியா அடிமையான ஜைதுப்து ஹாரிஸ் (ரழி) அவர்களுக்கு திருமணம் முடித்தார்கள். அக்காலத்தில் இது புதுமையான ஆச்சிரியமான ஒரு நிகழ்ச்சியாகும். 

يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ (13)

  மனிதர்களே நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், பெண்ணிலிருந்து படைத்தோம். இன்னும் ஒருவருக்கொருவர் நீங்கள் அறிமுகமாகிக் கொள்வதற்காக உங்களை கிளைகளாக, கோத்திரங்களாக ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடம் உங்களில் மிக கண்ணிய மிக்கவர் உங்களில் மிகவும் பயபக்தியுடையவர் தான் நிச்சயமாக அல்லாஹ் யாவையும் நன்கறிந்தவன். (ஹுஜராத்-13) 

நபியும் கிராமவாசியும் 

ஜாஹிர் பின் ஹராம் என்ற ஸஹாபி கிராம வாசியாகவும், அறுவறுப்பான தோற்றமுடையவராகவும் இருந்தார். 

இவர் ஊரில் இருந்து வரும் போது நபி (ஸல்)  அவர்களுக்கு அன்பளிப்பு வழங்குவார். பதிலுக்கு நபி(ஸல்) அவர்களும் அன்பளிப்பு வழங்குவார்கள். ஒரு நாள் அவர் கடைத்தெருவில் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது அவர் பார்க்காத வண்ணம் பின்னே வந்து நபி (ஸல்) அவர்கள் அவரை கட்டியணைத்தார்கள். அந்த ஸஹாபி யார் நீங்கள் என்னை விட்டு விடுங்கள் என்று திரும்பினார்.அப்போது தன்னை அணைத்திருப்பது நாயமகம் தான் என்று அறிந்த பின் தன் முதுகை நபியின் நெஞ்சோடு நெருக்கமாக ஆக்கினார். அப்போது நபி (ஸல்)  அவர்கள் கேலியாக இந்த அடிமையை யார் வாங்குவார் என்றார்கள். அதற்கவர் நான் செல்லாக் காசு, மதிப்பற்றவன் யா ரஸுலல்லாஹ் என்று கூறினார்கள். நபி (ஸல்)   அவர்கள் நீர் அல்லாஹ்விடம் மதிப்பற்றவன் கிடையாது என்று அந்த நபரின் அந்தஸ்தை உயர்த்தியவர்கள் நபி (ஸல்)  அவர்கள் தான்.

அரசரும் அடிமையும்

அரசருக்கும், அடிமைக்கும் மத்தியிலேயே பாகுபாடு இல்லை என்று இருக்குமாயின் அது இஸ்லாமிய ஆட்சியாகத் தான் இருக்கும். பாலஸ்தீன நாடு உமர் (ரழி) அவர்களின் காலத்தில் வெற்றி கொள்ளப்பட்டது. அந்த பாலஸ்தீனியர்களுடன் உடன்டிக்கை செய்துகொள்ள கலீஃபா உமர் (ரழி) அவர்கள் மதீனா நகரை விட்டும் புறப்பட்டார்கள். அப்போது மிக எளிய உடைகளையே அணிந்திருந்தார்கள். அவர்களுடன் ஒரு ஒட்டகமும், ஒரு பணியாளரும் இருந்தனர். உமர் (ரழி) அவர்கள் தமது பணியாளரிடம் கூறினார்கள் நான் மட்டும் ஒட்டகத்தின் மீது அமர்ந்து கொண்டு நீ நடந்து வந்தால் நான் உன் மீது கொடுமை புரிந்தவனாவேன். நீ மட்டும் ஒட்டகத்தில் அமர்ந்து நான் நடந்து வந்தால் நீ என் மீது கொடுமை புரிந்தவனாகி விடுவாய். நாம் இருவரும் ஒட்டகத்தின் மீது அமர்ந்து பயணம் செய்தால் இந்த வாயில்லா பிராணியின் மீது நாம் இருவரும் கொடுமை புரிந்தவர்களாகுவோம்.எனவே நாம் நேர அட்டவணை போட்டு பயணத்தைத் தொடர்வோம். நமக்கு மத்தியில் பாகுபாடு தேவையில்லை என்றார்கள். அதன்படி கலீஃபா சிறிது தூரம் வரை ஒட்டகத்தில் அமர்ந்து வந்தார்கள். பணியாளர் நடந்து வந்தார். அடுத்து பணியாளர் அமர்ந்து வந்தார். உமர் (ரழி) அவர்கள் நடந்து வந்தார்கள். பிறகு இருவரும் நடந்து வந்தனர். ஒட்டகத்துக்கு ஓய்வு கொடுத்தனர். இவ்வாறு மாறி மாறி பயணித்து வந்தனர். இவர்கள் பாலஸ்தீன் நாட்டில் நுழையும் போது பணியாளர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்த காட்சியை அனைவரும் பார்த்தனர். கலீஃபா இங்கே நான் அரசன் நீ அடிமை என்று எந்த பாகுபாட்டையும் காட்டவில்லை. ஆக எந்த மதமும் எந்த சமுதாயமும் தராத இந்த சமத்துவத்தை நிலை நாட்டுவதில் இஸ்லாம் உச்சத்தைத் தொட்டது. உலகிலேயே மதச்சார்பற்ற அரசை முதலில் நிறுவியவர்கள் முஸ்லிம்கள் தான். முகலாயர் காலத்தில் மக்கள் வாழ்வு வளம் பெற்று விளங்கியது. பல சிற்றரசுகளாக பிரிந்து கிடந்த நாட்டை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். நாடு முழுவதும் ஒரே ஒரு சட்டம் அமலுக்கு வந்தது. ஜாதி வெறிக்கு ஒரு நீதி கிடைத்தது. 

இஸ்லாத்தில் ஏற்றத்தாழ்வு கிடையாது என்பதற்கு தொழுகையே மாபெரும் சாட்சியாகும். இது வெறும் வணக்கமாக மட்டுமல்ல. மாறாக சமத்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு வழியாக இருக்கிறது. இமாம் முன்னால் நின்று தொழுகை நடத்துகிறார் என்றால் அது அவருக்கு இருக்கிற தனிப்பட்ட முன்னுரிமையினால் அல்ல. ஒரு சமுதாயம் ஒரு தலைமையின் கீழ் சீராக செயல்பட வேண்டும் என்பதை பழக்கப்படுத்துவதற்குத் தான். விபரம் தெரிந்த எவரும் அப்பொறுப்பை ஏற்கலாம். சில மதங்களில் இருப்பது போல குறிப்பிட்ட வகுப்பினர் மட்டும் தான் மதகுருவாக அர்ச்சகர்களாக ஆக முடியும் என்பதைப் போன்ற பிரிவினை இஸ்லாத்தில் இல்லை. பயிற்சி பெற்ற இந்துக்கள் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என தமிழக அரசு கொண்டு வந்த ஆணையை நிராகரித்தது உச்சநீதி மன்றம். 

இஸ்லாம் எந்த நிலையிலும் யாரையும் தாழ்வாக கருதுவதை எப்போதும் அனுமதிக்கவில்லை. ஆனால் முஸ்லிம்களிலே சிலர் நீ தமிழ் முஸ்லிம் நான் உர்து முஸ்லிம் என்று பாகுபாடு காட்டி மணந்து கொள்ள மறுக்கின்றனர். இது போன்ற எண்ணங்களை முஸ்லிம்கள் உடைத்து இஸ்லாம் மார்க்கம் விரும்புகிற சமத்துவத்தை கடைபிடித்து யாரையும் தாழ்வாக கருதாமல் வாழ வேண்டும்

இருபத்தேழாவது தராவீஹ்

 28-03-2025 RAMZAN – 27 بسم الله الرحمن الرحيم   27 வது இரவு பயான்  https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES ...